இப்படியெல்லாமா சேலை இருக்கு?? ரசிகர்களின் வாயை பிளக்க வைத்த நாம் இருவர் நமக்கு இருவர் ரக்ஷிதா!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் கதா நாயகி ரக்ஷிதா இன்று (17 ஜூலை 2021) எமோஜி தினம் என்பதால் எமோஜி புடவையில் போட்டோவிற்கு போஸ் கொடுத்துள்ளார்.அதை பார்த்த ரசிகர்கள் இப்படியெல்லாமா புடவை இருக்கு?? என கமெண்ட்ஸில் கேட்டு வருகின்றனர்.

ரக்ஷிதா மஹாலக்ஷ்மி, சின்ன திரையில் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர். அந்த தொடரில் வரும் இரு கதாநாயகிகளில் ஒருவராக இவர் நடித்திருப்பார். பின்னர் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமான இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நாச்சியார்புரம் தொடரில் நடித்தார். தற்போது மீண்டும் விஜய் டிவியில் மிர்ச்சி செந்திலுக்கு ஜோடியாக நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து வருகிறார்.

இவர் சமூக வலைத்தளங்களில் தன்னுடைய அழகு ததும்பும் போட்டோக்களை ரசிகர்களிடம் அடிக்கடி பகிர்வார். இன்ஸ்டாகிராமில் மட்டும் இவரை 1 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் பின்தொடர்கின்றனர். இந்நிலையில் இன்று எமோஜி தினம் என்பதால் எமோஜிகளால் ஆன சேலையில் தன் போட்டோவை பகிர்ந்துள்ளார். மேலும் “எனக்கு எமோஜிகள் என்றால் மிகவும் விருப்பம். அதனால் என்னுடைய இந்த போட்டோவை பகிர்கிறேன்” என தலைப்பிட்டுள்ளார். ரசிகர்கள் இதற்கு லைக்ஸை அள்ளி தட்டி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here