விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் புதிய நாயகிகள் களமிறங்க போவதாகவும், முக்கிய பிரபலம் ஒருவர் விலகப்போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நாம் இருவர் நமக்கு இருவர்
நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் தற்போது மாறன் என்ற புதிய கதாபாத்திரம் நுழைந்துள்ளது. அதாவது செந்தில் தான் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். மாறனும் மாயனும் இன்று சந்திக்க ஒரு பாச போராட்டமே நடைபெற்றது.
தான் பட்ட கஷ்டங்கள் அனைத்தையுமே மாறன் எடுத்து சொல்ல மாயன் கட்டி அணைக்கிறார். மேலும் இந்த பூனை கண்ணை காட்டியே எங்க அம்மாவை மயக்கி கூட்டிட்டு போயிடேல என்று சொல்கிறார்.
இப்படி பல பாசங்கள் நிறைந்த தொடராகவே இருந்தது. இந்நிலையில் முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. அதாவது இதில் மகாவாக நடிக்கும் ரக்ஷிதா விலக போவதாகவும் சீசன் 1இல் நடித்த ரக்சா இதில் நடிக்க போவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் மாறனுக்கு ஜோடியாக அன்புடன் குஷி சீரியலில் நடித்த ஸ்ரேயா நடிக்க உள்ளாராம். இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என்றும் தெரியவில்லை.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்