விஜய் டிவியில் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் இருந்து விலகிய ரக்ஷா ஹோலா தற்போது அன்பே சிவம் என்னும் தொடரில் நடித்து கொண்டிருந்தார். தற்போது அந்த சீரியலில் இருந்தும் திடீரென விலகியுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
சீரியலுக்கு குட் பை சொன்ன பிரபல விஜய் டிவி நடிகை – அதிரடி முடிவெடுத்த சேனல் நிர்வாகம்!!
ரக்ஷா ஹோலா:
விஜய் தொலைக்காட்சியில் நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2 தொடர் தற்போது இரவு 7.30 மணிக்கு விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது. சீசன் 1 கொரோனா தொற்றின் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அந்த சீசனில் மிர்ச்சி செந்தில் அண்ணன், மற்றும் தம்பியாக இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இவர்களுக்கு ஜோடியாக ரக்ஷா மற்றும் ரேஷ்மி ஆகியோர் நடித்துள்ளனர். ரக்ஷா கொரோனா தொற்றின் காரணமாக நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலை விட்டு விலகினார்.
இந்த சீரியலில் இருந்து விலகி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் அன்பே சிவம் என்னும் தொடரில் நடித்து கொண்டிருந்தார். தற்போது இந்த தொடரில் இருந்தும் ரக்ஷா விலகியுள்ளார். இவர் ஏன் சீரியலை விட்டு திடீரெனெ விலகியுள்ளார் என தெளிவான காரணங்கள் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் அதிக உடல் எடையால் சீரியல் நிர்வாகம் இவரை சீரியலில் இருந்து வெளியேற்றி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்