சமீபத்தில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஊழல் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் நெருங்கிய நண்பரான ரஜினிகாந்த் சந்திரபாபு நாயுடு மகன் நாரா லோகேஷிடம் தொலைபேசியில் அழைத்து பேசி உள்ளதாக கூறப்படுகிறது. அதில் உரையாடிய ரஜினி, “தைரியமாக இருங்கள். எதுக்கும் கவலை பட வேண்டாம், எனது நண்பர் எந்தத் தவறையும் செய்திருக்க மாட்டார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அவர் மக்களுக்காக செய்த நலத்திட்ட உதவிகளும், வளர்ச்சி திட்டங்களும் மக்களுக்கு அவரை தவறாக நினைக்க வைக்காது. 24 மணி நேரமும் மக்களுக்காக பாடுபட்ட அவரின் உழைப்பும், அர்ப்பணிப்பு ஒருபோதும் வீண்போகாது. இது போன்ற விஷயங்கள் ஒரு போதும் அவருடைய புகழுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. மேலும் அவர் விரைவில் சிறையில் இருந்து வெளியே வருவார்” என ரஜினி பேசியுள்ளார். ஆனால் அவர்கள் போனில் உரையாடியது உண்மையா என்பது தெரியவில்லை.