தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து கொரோனா நிவாரணம் வழங்கிய ரஜினிகாந்த் தற்போது மக்கள் அனைவரும் மாஸ்க் அணியுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ரஜினிகாந்த்:
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு வேகமெடுத்து வருகிறது. மேலும் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் அனைவரும் கடுமையான வேதனைக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகத்தில் தற்போது கடுமையான ஊரடங்கு நடவடிக்கைகள் அமலில் இருந்து வருகிறது. இருந்தும் கொரோன ஆதிக்கம் செலுத்துவது சற்று வேதனைக்குரியதே.இந்நிலையில் தமிழகத்தில் தற்போது கொரோனா தடுப்பு பணிகளுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பலர் தங்களால் இயன்றதை செய்து வருகின்றனர்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அந்த வகையில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.50 லட்சத்தை கொரோனா நிவாரண நிதியாக வழங்கினார்.பின்பு இதுகுறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, கொரோனா தொற்றினை ஒழிக்க தமிழக அரசின் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளுக்கும் மக்கள் கட்டாயமாக ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மேலும் அனைவரும் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.