சினிமா துறையில் தலை சிறந்த நடிகர்களில் ஒருவராக தமிழ் மொழியின் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வரும் நடிகர் ரஜினி. இந்நிலையில் இவரின் அடுத்த படத்தை பற்றிய ஒரு சில தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது ரஜினியின் 169வது படத்தில் தீபிகா படுகோனே அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்திய சினிமா துறையில் மிகுந்த புகழ் பெற்றவர் நடிகர் ரஜினி அவர்கள். சாமானியர்களும் திரையில் சாதனைகள் செய்யலாம் என நிரூபித்தவர்களுள் ஒருவர் ரஜினிகாந்த். தற்போது இவரின் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்க நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட நாயகிகள் ரஜினி உடன் சேர்ந்து நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ள நிலையில்,ரஜினி அவர்களின் அடுத்த படத்தை பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.
அதாவது ரஜினியின் 169 வது படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கி வெற்றி கண்ட தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஹிந்தி உலகில் பிரபல இளம் முன்னனி நடிகையாக இருக்கும் தீபிகா படுகோனே ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் இணையத்தில் கசிந்து உள்ளன. மேலும் இவர்கள் இருவரும் ஏற்கனவே கோச்சடையான் படத்தில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இருப்பினும் அந்த படம் அந்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்