ஒரே மேடையில் தோன்றவுள்ள ரஜினி, கமல், விஜய், அஜித்.. ரசிகர்கள் கொண்டாட்டம் – எப்போது தெரியுமா?

0
ஒரே மேடையில் தோன்றவுள்ள ரஜினி, கமல், விஜய், அஜித்.. ரசிகர்கள் கொண்டாட்டம் - எப்போது தெரியுமா?

சென்னை மாமல்லபுரத்தில் நாளை (28-07-2022) நடக்க இருக்கும் 44-வது ஒலிம்பியாட் போட்டியில் தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்கள் ஆன ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

ஒலிம்பியாட் போட்டி:

தமிழ் நாட்டில் முதல் முறையாக சென்னை மாமல்லபுரத்தில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை நடக்க இருக்கும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் மு. க. ஸ்டாலின் கலந்து கொள்கின்றனர். மேலும் இந்த போட்டிக்கு கிட்டத்தட்ட 188 நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கில் போட்டியாளர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். போட்டியில் பங்கேற்கும் வெளிநாட்டு போட்டியாளர்களுக்கு எல்லா விதமான வசதிகளையும் தமிழக அரசு செய்து கொடுத்திருக்கிறது.

இதனை தொடர்ந்து சினிமாவில் மிக முக்கிய பிரபலமாக விளங்குபவர்கள் தான் ரஜினி, கமல், விஜய், அஜித். இந்நிலையில் நாளை (28-07-2022) தொடங்க இருக்கும் 44-வது ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள இவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. All India Chess Association மற்றும் தமிழக அரசின் சார்பில் விடுக்கப்பட்டுள்ள இந்த அழைப்பை ஏற்று ரஜினி, கமல், விஜய் மற்றும் அஜித் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஒரே இடத்தில் நான்கு பேரையும் சந்திக்கும் வாய்ப்பை எதிர்பார்த்து அவர்களின் ரசிகர் பட்டாளங்கள் ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here