தமிழகத்தில் தீவிரமடையும் கொரோனா நோய்த்தொற்று – தலைமை செயலாளர் அவசர ஆலோசனை!!

0
tn government

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மக்களிடையே கொரோனா நோய்த்தொற்று மிக அதிகமான அளவில் கண்டறியப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது இதுகுறித்து தமிழக தலைமை செயலாளர் ராஜிவ் ரஞ்சன் அவசர ஆலோசனை நடத்துகிறார்.

கொரோனா நோய்த்தொற்று:

தமிழகத்தில் கடந்த ஆண்டின் முதல் அலையை விட தற்போது ஏற்பட்டிருக்கும் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இதனை தடுப்பதற்கு கடந்த 10ம் தேதி முதல் தமிழகத்தில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அமலுக்கு வந்துள்ளது. மேலும் தமிழகத்தில் இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதேபோல் தற்போது தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் பணிகளும் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தமிழகத்திற்கு கூடுதலாக 20 லட்ச தடுப்பூசியை வழங்குமாறு மத்திய அரசிற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 15லட்ச கோவிஷீல்டு மற்றும் 5 லட்ச கோவாக்சின் தடுப்பூசியை வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா பரவலுக்கு மத்தியில் பிளஸ் 2 செய்முறை தேர்வு – இன்று முதல் துவக்கம்!!

இந்நிலையில் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்று எல்லையை மீறி சென்று கொண்டிருப்பதால் இதனை குறித்து தலைமை செயலாளர் ராஜிவ் ரஞ்சன் அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்தி வருகிறார். இதனை கட்டுப்படுத்துவது குறித்து உயர் அதிகாரிகளுடன் ராஜிவ் ரஞ்சன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here