#RRvsKKR ஐபிஎல் போட்டி – தோல்வியில் இருந்து மீள போராடும் இரு அணிகள்!ஜெயிக்கப்போவது யார்??

0

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பல பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி மும்பை மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.

ராஜஸ்தான் vs கொல்கத்தா

இந்த ஆண்டுக்கான 14வது ஐபிஎல் தொடர் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா ஆகிய இரு அணிகளுக்கும் மிக மோசமாக துவங்கியுள்ளன. காரணம் இந்த இரு அணிகளும் இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 1ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். இதனால் புள்ளி பட்டியலில் இந்த இரு அணிகளும் கடைசி இரண்டு இடங்களை பிடித்துள்ளனர். இந்நிலையில் இன்று இரவு மும்பையில் இந்த இரு அணிகளும் பல பரீட்சை நடத்தவுள்ளன.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கொல்கத்தா அணி தான் கடைசியாக விளையாடிய சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மிக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 200 ரன்களை கடந்தது. இருந்தும் கடைசி கட்டத்தில் சென்னை அணி மிக சிறப்பாக செயல்பட்டு தனது வெற்றியை பதிவு செய்தது. கடந்த போட்டியை போல் இந்த முறையும் கொல்கத்தா அணி சிறப்பாக செயல்பட்டால் மிக எளிதாக வெற்றியை பெற்றுவிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் ராஜஸ்தான் அணியும் இந்த தொடரில் பிரகாசிக்க மிகவும் திணறி வருகிறது. இந்த அணியில் அதிரடி ஆட்டக்காரர்கள் பலர் உள்ளனர். இருந்தும் இந்த அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி பேட்டிங் மற்றும் பவுலிங்கில் மிக அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே கொல்கத்தா அணிக்கு நெருக்கடி கொடுக்க முடியும்.

இந்த இரு அணிகளும் இதுவரை 23 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். அதில் அதிகபட்சமாக கொல்கத்தா அணி 12 முறையும், ராஜஸ்தான் அணி 10 முறையும் தங்களது வெற்றியை பதிவு செய்துள்ளனர். 1 போட்டிக்கு முடிவு இல்லை. புள்ளி பட்டியலில் கடைசி இரு இடங்களில் இருக்கும் இந்த இரு அணிகள் எழுச்சி பெற கடுமையாக போராடவுள்ளதால் இந்த போட்டி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here