சச்சின் பைலட்டின் ஆட்களுக்கு எதிரான தகுதியிழப்பு நடவடிக்கைகளை செவ்வாய் கிழமை மாலை 5:30 வரை எடுக்கக் கூடாது என ஐகோர்ட் சட்டசபை பேச்சாளருக்கு உத்தரவிட்டுள்ளது.
தகுதியிழப்பு அறிவிப்பு:
முன்னாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட்டின் ஆட்களுக்கு எதிராக தகுதியிழப்பு அறிவிப்பு கொடுத்ததை அடுத்து, அவர் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் முன்பு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதனை விசாரித்த உயர்நீதிமன்றம், மாநில சட்டசபை பேச்சாளரை செவ்வாய் கிழமை மாலை 5:30 வரை எதிர் MLA- கள் மீது நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. மேலும் உயர்நீதிமன்றம் திங்கள் கிழமை காலை 10 மணிக்கு கூடும் எனவும் அறிவித்துள்ளது. இன்று மாலை 5 மணிக்கு பேச்சாளர் இதனை பற்றி பேசுவார் என எதிர்பார்க்கப் படுகிறது.
MLA- கள் மீது புகார்:
திங்கள் கிழமை மற்றும் செவ்வாய் கிழமை அன்று நடந்த காங்கிரஸ் சட்டமன்ற கட்சி கூட்டத்தில் அந்த MLA- கள் பங்கேற்க தவறியதாக ஆளும் கட்சி புகார் கொடுத்ததை அடுத்தே அறிவிப்புகள் கொடுக்க பட்டன. அந்நாளின் ஆரம்பத்தில், காங்கிரஸானது அதன் இரண்டு MLA- களை, அசோக் கெலோட் அரசை கவிழ்க்க சதியில் ஈடுபட்டதற்காக முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து விளக்கியுள்ளது. மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் சேகுவாட் மீது மாநிலத்தில் சட்டம் இயற்றுபவர்களிடம் கையூட்டில் ஈடுபட்டதற்காக FIR பதிவு செய்யுமாறு இக்கட்சி வலியுறுத்தியுள்ளது. இதனை BJP தலைவர் மறுத்துள்ளார்.
ப. சிதம்பரத்துடன் பேச்சு
வியாழக் கிழமை அன்று அதிரிச்சியூட்டும் வகையில், பைலட் அவர்கள், மூத்த கட்சி தலைவர் மற்றும் மத்திய அமைச்சர் பி சிதம்பரத்தை அணுகியதோடு, தனக்கு எதிராக தொடர்ந்த தகுதியிழப்பு நடவடிக்கைகளை எதிர்த்து உயர்நீதிமன்றத்தை நாடினார். பைலட் தன்னை துணை முதலமைச்சர் மற்றும் ராஜஸ்தான் PPC தலைவர் போன்ற பதவிகளில் இருந்து விலக்கிய பின்னரே பி சிதம்பரத்துடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.