ஆகஸ்ட் 2 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு – ராஜஸ்தான் மாநில மாநில கல்வி அமைச்சர்!!

0

அதிகரித்த கொரோனா தொற்றால் மூடப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளை மீண்டும் வருகிற ஆகஸ்ட் 2 முதல் திறக்க மாநில அமைச்சரவை கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளதாக ராஜஸ்தான் மாநில கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு முதல் கொரோனா தொற்றால் பள்ளி மற்றும் கல்லூரிகள் பல மாநிலங்களில் மூட பட்டுள்ளது. தற்போது கொரோனாவின் தீவிரம் பல மாநிலங்களில் குறைந்து வருவதால் மாநில அரசுகள் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறப்பது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

இந்நிலையில் மிக வேகமாக தொற்றின் எண்ணிக்கை குறைந்து வரும் மாநிலங்களில் ராஜஸ்தானும் ஒன்று. நேற்று அங்கு வெறும் 25 பேருக்கு மட்டுமே தொற்று உறுதியான நிலையில் தற்போது மாநில கல்வி அமைச்சர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதாவது ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் மாநில கல்வி அமைச்சர் கோவிந்த் சிங் டோட்சாரா அவரின் ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here