இந்தியா முழுவதும் உள்ள அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பழைய ஓய்வூதிய திட்டம் :
இந்தியா முழுவதும் கடந்த 2006 ஆம் ஆண்டு, பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு, CPS எனப்படும் பங்களிப்பு பென்ஷன் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. அரசின் இந்த நடவடிக்கை, ஊழியர்களின் ஓய்வுரிமையை தட்டிப் பறிக்கும் செயல் எனக் கூறி, பல்வேறு மாநிலங்களில் இதனை திரும்பப் பெறக் கோரி ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அரசு ஊழியர்களின் இந்த கோரிக்கைக்கு செவி சாய்க்கும் விதமாக ராஜஸ்தான், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநில அரசுகள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி விட்டது. இந்த நிலையில், இமாச்சல் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய, ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட், இந்தியா முழுவதும், மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை (OPS ) அமல்படுத்த வேண்டும் எனவும், அரசு இந்த விஷயத்தில் கால தாமதம் செய்ய கூடாது எனவும் கோரிக்கை விடுத்தார்.
ராஜஸ்தானில், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியிடப்பட்டு விட்டதாகவும், ஒரு சிலர் மக்களை திசை திருப்ப தேவையற்ற வதந்திகளை கிளப்பிக் கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.