ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதி திமுக எம்.எல்.ஏ எஸ்.தங்கபாண்டியன், கொரோன தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
கொரோனா பரவல்:
கொரோனா காரணமாக தொகுதியில் பல்வேறு இடங்களுக்கும் சென்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.
பஜாஜ் நிதி நிறுவனத்தின் தலைவர் ராகுல் பஜாஜ் பதவி விலக முடிவு..!
தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், எம்.எல்.ஏ. மனைவி மற்றும் இரு மகன்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிகிச்சைக்கு அனுமதி:
அவர்கள் 3 பேரும் மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ.வும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளார். ஜூலை 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் காய்ச்சல் ஏற்பட்ட பின்னர், ஜூலை 14 ஆம் தேதி ராஜபாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் தனது மாதிரியை வழங்க முன்வந்ததாக திரு.தங்கபாண்டியன் கூறினார்.
முன்னதாக, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர் , அதற்கு ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .