சென்னை உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்பின் போது அந்த பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்தாக அவர் மீது புகார் எழுந்ததை அடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து தனக்கு ஜாமீன் வேண்டும் என்று ராஜகோபாலன் தரப்பில் போக்சோ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் அந்த பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் இந்த விவகாரத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாக அவர் கூறியுள்ளார். மே 24 ஆம் தேதி அவரைக் கைது செய்த போலீசார் அவர் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் மேலும் பல ஆசிரியர்கள் கைதாகக் கூடும் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் ஜூன் 8ஆம் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜூன் 1ஆம் தேதி இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ராஜகோபாலனை மூன்று நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது. மூன்று நாட்கள் நேற்றோடு நிறைவடைந்த நிலையில் நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட ராஜகோபாலனை மீண்டும் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனிடையில் ஜாமீன் கோரி ராஜகோபாலன் தரப்பினர் போக்சோ நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.மனுவை விசாரித்த நீதிபதி ஃபரூக், ராஜகோபாலனுக்கு ஜாமீன் வழங்க மறுத்து மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!