ராஜா ராணி சீரியலில் தற்போது சந்தியா சென்ற பஸ் விபத்துக்குள்ளான விஷயம் தெரிந்ததும் சிவகாமி கதறுகிறார். ஒட்டுமொத்த குடும்பமும் சந்தியா இதுவரை செய்த உதவிகளை நினைத்து அழுகின்றனர்.
ராஜா ராணி 2:
ராஜா ராணி சீரியலில் பக்கத்து வீட்டில் வந்து சந்தியா சென்ற பஸ் விபத்துக்குள்ளானதை சொல்ல அனைவரும் அதிர்ச்சியாகின்றனர். மேலும் சிவகாமி மயக்கமடைகிறார். என் மருமகளுக்கு சாபம் கொடுத்தது பழிச்சுடுச்சே.. என் சரவணனுக்கு என்ன ஆச்சோ என்று அழுகிறார். செந்திலும் ஆதியும் சரவணன் சந்தியாவை தேடி செல்கின்றனர்.
அடுத்ததாக அர்ச்சனா தனியாக சென்று கதறி அழுகிறார். அப்பொழுது பார்வதி அந்த பக்கம் வர என்னாச்சு என்று கேட்கிறார். சந்தியாவை தனக்கு சுத்தமாக பிடிக்காது, அதற்கும் மேல் அவள் வந்ததுக்கு அப்புறம் தான் எனக்கு இந்த வீட்டுல மரியாதை இல்லாம போச்சு. அதனால் தான் அவளை வீட்டை விட்டு வெளியே அனுப்பனும்னு நெனச்சேன், ஆனா அவ சாகணும்னுலாம் நான் நினைக்கவே இல்லை.
இந்த குடும்பத்துக்கு எல்லா உதவியும் செஞ்சுட்டு அமைதியா இருப்பா அவளுக்கா இந்த நிலைமை என்று அழுகிறார். பார்வதியும் சந்தியாவை தவறாக புரிந்து கொண்டதை நினைத்து கண்கலங்குகிறார். மேலும் மயிலு மற்றும் சர்க்கரை சந்தியாவிற்கு ஒன்னும் ஆக கூடாது என்று அழுகின்றனர்.
மேலும் சிவகாமி, சந்தியா சரவணன் போட்டோவை பார்த்து அழுகிறார். இந்த குடும்பத்தையே தாங்குன என் மகனுக்கு இப்படி ஒரு நிலைமையா என்று கதறுகிறார். அனைவரும் சிவகாமியை சமாதானம் செய்கின்றனர்.
மேலும் சரவணன் சந்தியாவை தேடி ஒரு கட்டத்தில் நொந்து போகிறார். அப்பொழுது சந்தியா கையில் ஒரு குழந்தையை வைத்து கொண்டு காப்பாற்றும்படி கத்துகிறார். அந்த குரலை கேட்டு திரும்பும் சரவணன் சந்தியாவை பார்த்து சந்தோஷமடைகிறார். சந்தியா என்று கத்த சரவணனை பார்த்து சந்தியாவும் ஓடி வருகிறார். சந்தியாவை பிரிந்த தவிப்பில் கட்டி அணைக்கிறார். இதோடு எபிசோடு முடிவடைகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்