விஜய் டிவியின் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வந்த சீரியல் தான் ராஜா ராணி 2. இதில் ஹீரோவாக சித்து மற்றும் ஹீரோயினாக சந்தியா நடித்து வந்தார். மேலும் இதில் நெகட்டிவ் ரோலில் நடித்து வந்தவர் தான் நடிகை அர்ச்சனா. இந்த சீரியலில் ஒரு வருடத்திற்கு மேலாக நடித்து வந்த இவர் சில காரணங்களால் இந்த சீரியலில் இருந்து விலகினார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் இவர் ராஜா ராணி சீரியலிலிருந்து தான் விலகியதற்கான காரணம் குறித்து அண்மையில் ஒரு பேட்டி ஒன்றில் அர்ச்சனா பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, நான் அந்த சீரியலில் 1வருடத்திற்கு மேல் நடித்துள்ளேன. மேலும் என்னுடைய பயணத்தை அவர்களுடன் தொடர எனக்கு எண்ணம் இல்லை. மேலும் புதிதாக சில விஷயங்களை தெரிந்து கொள்ள நினைத்துதான் அதிலிருந்து வெளியேறினேன்.
அந்த வகையில் அதன் பின்னர் தான் நான் என்னுடைய சில செயல்களை மாற்றி கொண்டேன். பல ஆல்பம் பாடல்களில் நடித்துள்ளேன். இதுபோக தற்போது டிமாண்டி காலனி 2 திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளேன். இதோடு இன்னும் சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இப்படி ராஜா ராணி சீரியலில் இருந்து வெளியேறியதற்கு பின்னரே நிறைய விஷயங்கள் என்னால் செய்ய முடிகிறது என உடைத்து பேசியுள்ளார்.