ராஜா ராணி முதல் சீசன் சக்கை போடு போட்டதை அடுத்து தற்போது அந்த சீரியல் பற்றிய புதிய தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.
ராஜா ராணி
ராஜா ராணி சீரியல் மக்கள் மத்தியில் அதிக பிரபலமாக ஒளிபரப்பாகி வந்தது. இதில் ஆலியா மற்றும் சஞ்சீவ் ஜோடியாக நடித்து வந்தனர். இந்த சீரியலையும் பிரவீன் பென்னட் இயக்கி வந்தார்.
அதாவது வேலைக்காரியாக ஷெண்பா படும் பாட்டை பார்த்து கார்த்திக் அவருக்கு எப்படி ஆதரவாக இருக்கிறார் என்பதை மையப்படுத்தியே இந்த கதை நகர்ந்திருக்கும்.
மேலும் கார்த்தி செம்பாவை திருமணம் செய்யும் சூழலும் ஏற்பட்டிருக்கும். அதன் பிறகு இருவருக்குள்ளும் எப்படி காதல் மலருகிறது என்பதை அடிப்படையாக வைத்து தான் இந்த சீரியல் நகர்ந்து கொண்டிருந்தது.
இந்நிலையில் இந்த சீரியலில் ஆலியாவிற்கு வீட்டில் உள்ளவர்களால் திருமணம் நிச்சயிக்கப்படும். அதில் மாப்பிள்ளையாக நடித்திருப்பவர் யார் என்று பார்த்தால் அதுதான் நம்ம பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்திருக்கும் துர்கா. இந்த சீரியலில் தான் அவர் முதன்முதலில் அறிமுகமாகியுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.