மீண்டும் #comeback கொடுக்கும் ‘ராஜா ராணி’ சீரியல் சஞ்சீவ் – அவரே வெளியிட்ட பதிவு!!

0
ஆலியா, சஞ்சீவ் இடையே வெடித்த பிரச்சனை - சண்டைக்கு காரணம் இதுதான்! இணையத்தில் பகீர் தகவல்!!
ஆலியா, சஞ்சீவ் இடையே வெடித்த பிரச்சனை - சண்டைக்கு காரணம் இதுதான்! இணையத்தில் பகீர் தகவல்!!

விஜய் டிவியில் ராஜா ராணி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமான சஞ்சீவ் தற்போது நீண்ட இடைவேளைக்கு பின்பு மீண்டும் களமிறங்கவுள்ளார். அதனை பற்றி தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்த செய்தி வைரலாகி வருகிறது.

ராஜா ராணி சஞ்சீவ்

ராஜா ராணி சீரியல் ஆரம்பிக்கப்பட்ட கொஞ்ச நாளிலேயே அமோக வரவேற்பை பெற்றது. அதாவது மக்கள் மத்தியில் சில நாட்களிலேயே அதிக வரவேற்பை பெற்ற சீரியல் என்ற பெருமையை இந்த ராஜா ராணி பெற்றது. வீட்டின் கடைசி பையனான கார்த்திக் படிப்பை முடித்து சொந்த ஊருக்கு திரும்ப சில காரணங்களால் வீட்டில் வேலை பார்க்கும் செண்பாவை திருமணம் செய்யும் சூழ்நிலை ஏற்படுகிறது.

இதனால் வீட்டில் ஏற்படும் பிரச்சனைகளும் அதன் பிறகு நாளடைவில் இருவருக்குள்ளும் காதல் எப்படி மலருகிறது என்பதையும் தான் கதையாக சித்தரித்திருப்பார்கள். இதில் தான் ஆலியா மற்றும் சஞ்சீவ் மக்கள் மத்தியில் பிரபலமானார்கள்.

அதன் பிறகு இருவருக்குள்ளும் காதல் மலர தற்போது திருமணம் ஆகி ஒரு குழந்தையும் உள்ளது. இந்நிலையில் தற்போது ஆலியா ராஜா ராணி 2 வில் நடித்து வருகிறார். சஞ்சீவுக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது கூடிய விரைவில் ஒரு புதிய வாய்ப்புடன் உங்களை சந்திப்பேன். என்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் தற்போது 1 மில்லியன் பாலோவர்ஸ் வந்துள்ளனர். எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here