விஜய் டிவியில் பிரபலமாக ராஜா ராணி சீசன் 1 இல் வில்லியாக நடித்த ஸ்ரீதேவி தற்போது நிறைமாதமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனால் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
ராஜா ராணி
விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பான சீரியல் தான் ராஜா ராணி. இதில் சஞ்சீவ் ஆலியா மனசா ஜோடியாக நடித்திருப்பார்கள். இதில் தான் இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்துகொண்டனர். இப்படி இருக்க இந்த சீரியலில் ஆலியா ஒரு அப்பாவி பெண்ணாக நடித்திருப்பார்.
அதாவது இந்த சீரியலிலும் வில்லி தான் பயங்கரமே. அதில் அர்ச்சனாவாக நடித்தவர் தான் ஸ்ரீதேவி. வீட்டை எப்படியாவது தன் பெயரில் மாற்ற வேண்டும் என்று துடியாய் துடித்து கொண்டிருந்தார். மேலும் ஆலியாவை தொடர்ந்து டார்ச்சர் செய்துகொண்டே இருந்தார்.
இந்த கதைக்களம் விறுவிறுப்பாக நகர்ந்ததற்கே அர்ச்சனா தான் ஒரு பெரிய காரணம். பல வில்லத்தனமான வேலைகளை செய்து சீரியலை பதட்ட நிலைமையிலேயே வைத்திருந்தார். இவர் விஜய் டிவியில் மட்டுமல்லாமல் பல சன் டிவியிலும் பல சீரியல்களில் நடித்திருந்தார்.
ஆனால் ராஜா ராணி தான் இவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. மேலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பேற்றை தந்தது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பாக தான் கர்ப்பமான விஷயத்தை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்தார். இப்படி இருக்க தற்போது நிறைமாதமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.