ராஜா ராணி 2 – சிவகாமி மாமியாரையே அலறவிட்ட சந்தியா – இன்னைக்கு ஒரு சம்பவம் இருக்கு!!

0

ராஜா ராணி சீரியலில் தற்போது ஊருக்கு சென்று பல பிரச்சனைகளில் சிக்கி கொள்கிறார். மேலும் இன்றைய எபிசோடில் சந்தியா மீண்டும் சிவகாமி மாமியாருடன் மாட்டிக்கொள்கிறார்.

ராஜா ராணி 2

ராஜா ராணி சீரியலில் தொடர்ந்து விறுவிறுப்பான சம்பவங்கள் நடந்து வருகிறது. வீட்டில் கல்யாணத்திற்கான ஏற்பாடுகள் தொடர்ந்து நடந்து கொண்டுள்ளது. ஒவ்வொரு விஷயத்திலும் சந்தியாவால் பிரச்சனை ஏற்பட சிவகாமி திட்டு வாங்குகிறார். இன்றைய எபிசோடில் சந்தியா நெல் பானையை தூக்கிக்கொண்டு வருகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அப்பொழுது சரோஜா காலில் முள் குத்தி விட வலி தாங்காமல் சந்தியாவை பிடிக்க அவர் குடத்தை விட்டு விடுகிறார். இதனால் கடுப்பாகும் சிவகாமி மாமியார் சந்தியாவை கண்டபடி திட்டுகிறார். மேலும் அடிக்கவும் செய்கிறார். அடுத்ததாக சரோஜா நான் தான் காரணம் என்று சொல்ல கிழவி அவரையும் சேர்த்து அடிக்கிறது. இதனை சந்தியா தட்டி கேட்கிறார்.

அவங்களுக்குனு ஒரு சுய மரியாதை இருக்கு. இப்படி எல்லாம் செய்யாதீங்க என்று சொல்ல கோவமடையும் சிவகாமி மாமியார் அனைவரின் காலில் விழுவது போல பாவலா செய்கிறார். மேலும் இது என்னுடைய வீடு, என் இஷ்டத்திற்கு தான் நடந்துக்கணும் என்று மிரட்டுகிறார். அடுத்து சந்தியாவை தனக்கு பிடிக்கவே இல்லை என்றும் சரவணன் மாதிரி ஒரு தங்கமான பையனுக்கு இப்படி ஒருத்தியை கட்டி வச்சு இருக்கீங்க என்றும் சொல்கிறார்.

அமலா பால், ஏ.எல்.விஜய் பிரிந்ததற்கு மொத்த காரணமும் தனுஷ் தானா?? இணையத்தில் கசிந்த தகவல்!!

இதனால் சந்தியா உடைந்தும் போகிறார். அதில் சிவகாமியும் வந்து என் மகனோட வாழ உனக்கு தகுதியே இல்லை என்று சொல்ல மேலும் உடைந்து போகிறார் சந்தியா. சரவணன் வந்து எவ்வளவோ சமாதானம் செய்கிறார். நினைச்சதை அடையுற வரை போராடணும்னு தான் விட முயற்சியா குழந்தையில இருந்து உழைச்சேன்.

அதே மாதிரி நீங்களும் போராடுங்க என்று சொல்ல அதனையும் சிவகாமி கேட்டு விடுகிறார். இதனால் கடுப்பாகி சரவணனை திட்டுகிறார். 3 மாத கெடு முடியப்போகிறது. சந்தியா வீட்டை விட்டு வெளியே போறது கண்டிப்பா நடக்கும் என்று சிவகாமி சவால் விடுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here