ராஜா ராணி சீரியலில் தற்போது அனைத்து பிரச்சனைகளும் ஓரளவிற்கு முடிவடைந்துள்ள நிலையில் தற்போது மீண்டும் சந்தியாவை வீட்டில் உள்ளவர்கள் குற்றம் சொல்ல ஆரம்பிக்கின்றனர்.
ராஜா ராணி 2
சந்தியா வழக்கம் போல காலையில் எழுந்து சரவணனுக்காக அனைத்து விஷயங்களையும் பார்த்து பார்த்து செய்கிறார். சரவணனுக்கு சட்டை எல்லாம் வாங்கி கொடுத்து அதனை போட்டும் விடுகிறார். நாளுக்கு நாள் இவர்களின் அன்னியோன்யமும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தான் சந்தியாவிற்கு மேலும் ஒரு இடி விழுந்தது போல ஒரு பிரச்சனை எற்படுகிறது. அதாவது சிவகாமி சரவணன் செய்த காரியம் அனைத்தையும் யோசித்து கொண்டுள்ளார். அப்பொழுது ரவி வந்து சரவணன் சொன்ன விஷயங்களை அனைத்தையும் சொல்ல சிவகாமிக்கு கோவம் தலைக்கேறியது.
அதாவது இவன் முடிவெடுத்து சந்தியாவை வெளியேற்ற நான் தான் கிடைத்தேனா?? இப்போ ஊரு முழுக்க சந்தியாவை நான் தான் கொடுமை படுத்துறேன்னு பேசிட்டு இருக்காங்க, இந்த பேச்செல்லாம் எனக்கு தேவையா?? என்று கண்டபடி பேசுகிறார். இதனை சரவணனிடம் கேட்டே ஆக வேண்டும் என்று நினைக்கிறார் சிவகாமி.
ஹாலுக்கு வந்து சரவணனை அழைக்க எதுக்கு அம்மா கிட்ட பொய் சொன்ன என்று கத்துகிறார். நீ அவ வாழ்க்கை நல்லா இருக்கணும்னு சொல்லி என் மேல பழியை போட்டு இப்போ எனக்கு தான் கெட்ட பேரு என்று சொல்கிறார். மேலும் சந்தியாவும் எதோ சொல்ல வர அவரை பேச விடாமல் செய்கிறார்.
கடைசியில் சரவணன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். சந்தியா அவர் மீது எந்த தப்பும் இல்லை என்று சொல்ல இதனால் கோவமடையும் சிவகாமி உனக்கு இந்த வீட்டுல என்ன குறை, இப்படி பட்ட புருஷன் உனக்கு கிடைப்பானா, உனக்காக குடும்பத்தையே எதிர்த்து நிக்கிறான் என்று சொல்கிறார். மேலும் நீ சொல்லி என் பையனை நான் புரிஞ்சிக்கணுமா?? என்று கத்துகிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்