ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமான அர்ச்சனா தற்போது தனது புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.
ராஜா ராணி அர்ச்சனா
ராஜா ராணி சீரியலில் சரவணனும் சந்தியாவும் எப்பொழுது சேருவார்கள் என்று பலரும் எதிர்பார்ப்புகளுடன் காத்து கொண்டுள்ளனர். சந்தியா இப்பொழுது தான் தனது காதலை உணர்ந்து வருகிறார்.
அந்த நேரத்தில் சரவணன் சந்தியாவை சரியாக புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்கிறார். இப்படியே கதை நகர்ந்து கொண்டுள்ளது. இதனை தெரிந்து கொண்ட அர்ச்சனா எப்படியாவது இதை வைத்து சநதியாவை வீட்டை விட்டே வெளியேற்ற வேண்டும் என்று நினைக்கிறார்.
வில்லி கதாபாத்திரம் தான் இந்த சீரியல் ஹைலைட். ஏனெனில் இந்த எபிசோடு டாப் ரேட்டிங்கில் வந்ததற்கு காரணமே அர்ச்சனா தான். ஆரம்பத்தில் அர்ச்சனா சிவகாமி மீது போலீஸ் கம்பளைண்ட் கொடுத்து விட்டு அந்த பழியை சந்தியா மீது போடுகிறார்.
அதனால் பல பிரச்சனை ஏற்பட்டது. அந்த எபிசோடு சூடுபிடிக்க ஆரம்பித்தது. அதன் பிறகு நகையை திருடி அந்த பழியை சந்தியா மீது போட அந்த எபிசோடும் டாப்பாக ஒளிபரப்பானது. அர்ச்சனாவின் அந்த துறுதுறுப்பான நடிப்பு தான் இந்த சீரியலுக்கு ஹைலைட் என்றே சொல்லலாம்.
மேலும் இவர் வெளியிடும் போட்டோஷூட், ரீல்ஸ் அனைத்தும் லைக்ஸ்களை அள்ளி வருகிறது. இந்நிலையில் அவர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். சிவப்பு நிற பனியனில் கையை தூக்கி எதையோ காட்டியவாறு வெளியிட்டுள்ளார். பலரும் அவரை கிண்டல் செய்து வருகின்றனர்.