ராஜா ராணி சீரியலின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருபவர் வைஷ்ணவி சுந்தர், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ராஜா ராணி சீரியலின் கதா நாயகி ஆல்யா மானசா மற்றும் அர்ச்சனா உடன் இணைந்து எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி பார்ட் 1 சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஆல்யா மானசா. இந்த சீரியலின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் தற்போது ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த இரண்டாம் பாகத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர்களில் அர்ச்சனா மற்றும் வைஷ்ணவி சுந்தர் இருவரும் அடங்குவர்.
பொதுவாகவே சீரியல் நடிகர்கள் தாங்கள் படப்பிடிப்பு தளங்களில் எடுத்த போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் ரசிகர்களிடம் பகிர்வது வழக்கம். தற்போது வைஷ்ணவி சுந்தரும் ஆல்யா மானசா மற்றும் அர்ச்சனா இருவருடனும் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். சமீபத்தில் விஜய் டிவி பரிவட்டம் என்ற நிகழ்ச்சியை நடத்தியது. அந்த நிகழ்ச்சியின் போது எடுத்த புகைப்படங்களையே இவர் தற்போது பதிவிட்டுள்ளார்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!