ராஜா ராணி சீரியலில் ஓரளவிற்கு எல்லா பிரச்சனைகளும் முடிவடைந்த பிறகு இப்பொழுது சந்தியாவிற்கு மீண்டும் ஒரு பெரிய அதிர்ச்சி காத்துக்கொண்டுள்ளது.
ராஜா ராணி 2
சரவணன் சந்தியா ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு தற்போது தங்களது வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். அதிலும் சிவகாமி இப்பொழுது தான் சந்தியாவை ஓரளவிற்கு புரிந்து வைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் சரவணன் சந்தியா வாழ்க்கையை தொடங்கலாம் என்று ஆரம்பிக்க கடைசி நேரத்தில் பார்வதி வந்து காரியத்தை கெடுத்து விட்டார். ஒரு பக்கம் அர்ச்சனா சந்தியாவை பழிவாங்க தீவிரமாக அலைந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் சந்தியாவின் தோழி ஐபிஎஸ் ஆக வேண்டும் என்ற கனவை பற்றி சரவணனிடம் எடுத்து சொல் என்று சொல்கிறார். சந்தியாவிற்கு இதுதான் சரி என்று தோன்றுகிறது. மேலும் வெளியில் செல்லும்போது சந்தியா தன் ஆசையை பற்றி சொல்ல வருகிறார். அப்பொழுது ஒரு லேடி போலீஸ் அந்த பக்கமாக வர அவர்களை பார்த்த சரவணன் கண்டிப்பாக பெண்கள் போலீசாகவே கூடாது என்று சொல்கிறார். இதனால் சந்தியா சோகத்தில் மூழ்குகிறார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்