புது வண்டியை ஆதியிடம் கொடுக்க மறுக்கும் சந்தியா – மீண்டும் பிரச்னைக்குள்ளாகும் ராஜா ராணி சீரியல்!!

0

ராஜா ராணி 2 சீரியலில் பரபரப்பான பல சம்பவங்கள் நடந்து வரும் நிலையில் தற்போது இனி வரும் காட்சிகளில் பற்றிய தகவல் வைரலாகி வருகிறது.

ராஜா ராணி 2

ராஜா ராணியில் சரவணன் வண்டி வாங்க வேண்டும் என்று சொல்ல வீடே அவரை கிண்டல் செய்கிறது. சிவகாமியும் சந்தியாவும் தான் அவரை ஊக்குவித்து வண்டி வாங்க வைக்கின்றன. சந்தியா சரவணனை வேகமாக அழைத்து சென்று அவருக்கு பிடித்தமான வண்டியை வாங்குகிறார். சரவணன் தனக்கு வண்டி ஓட்ட தெரியாது என்று சொல்ல சந்தியா அவரை பின்னால் உட்கார வைத்து ஓட்டுகிறார்.

மேலும் சரவணனுக்கு மெதுவாகவும் பொறுமையாகவும் வண்டி எப்படி ஓட்டுவது என்று சொல்லிக் கொடுக்கிறார். அதன் பிறகு வீட்டிற்கு வரும் சரவணன் சந்தியா வண்டியை காட்ட அனைவரும் சந்தோசம் அடைகின்றனர். ஆதி வண்டியை ஓட்ட வேண்டும் என்று சாவியை கேட்கிறார். அதற்கு சந்தியா வண்டியை தரமுடியாது என்று சொல்கிறார். அதாவது ஆதியிடம் இதுவரையும் லைசென்ஸ் எதுவுமே கிடையாது. அப்படி ஓட்டுவது தவறான ஒன்று என்று தர மறுக்கிறார். இதனால் வீட்டில் அடுத்து என்ன பிரச்சனை நடக்கப் போகிறது என்று தெரியவில்லை.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here