சந்தியாவுக்கு அடுத்தடுத்து ஷாக் கொடுத்த கௌரி மேடம்.., அர்ச்சனா அம்மாவிடம் மாட்டிக்கொண்ட சிவகாமி.., ராஜா ராணி 2 ட்விஸ்டு!!

0
சந்தியாவுக்கு அடுத்தடுத்து ஷாக் கொடுத்த கௌரி மேடம்.., அர்ச்சனா அம்மாவிடம் மாட்டிக்கொண்ட சிவகாமி.., ராஜா ராணி 2 ட்விஸ்டு!!
சந்தியாவுக்கு அடுத்தடுத்து ஷாக் கொடுத்த கௌரி மேடம்.., அர்ச்சனா அம்மாவிடம் மாட்டிக்கொண்ட சிவகாமி.., ராஜா ராணி 2 ட்விஸ்டு!!

ராஜா ராணி 2 சீரியல் சந்தியா IPS ஆபீஸரிடம் இரண்டு நாட்கள் லீவு வேண்டும் என எவ்வளவு போராடியும் லீவு கொடுக்க முடியாது என ஆபிஸர் கரராக கூறிவிடுகிறார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் தண்ணீர் நிரப்பும் போட்டியில் அப்துல் டீம் ரொம்பவே பின் தங்கியுள்ளது. இதனால் இவர்கள் அனைவரும் கடுமையாக போராடுகின்றனர். அப்போது வாலியை இழுக்கும் அப்துல் கையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வர தொடங்குகிறது.

கணவர் இறந்த சோகம் பத்தாதுன்னு மீனாவுக்கு இந்த பிரச்சனை வேறயா?? கண்கலங்க வைத்த செய்தி!!

இன்னும் பத்து நிமிடத்தில் 100 லிட்டர் தண்ணீர் நிரப்ப வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால் சந்தியா டக்கென்று தண்ணீர் தொட்டிக்குள் குதித்து தண்ணீரை எடுத்துக் கொடுக்கிறார். இதன் மூலம் அப்துல் டீம் வெற்றி பெறுகிறார்கள். இதனால் கௌரி மேடம் இந்த போட்டியில் ஸ்டார் பெர்ஃபார்மர் சந்தியா தான் என அவருக்கு மெடல் அணிவிக்கிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

மேலும் அனைத்து போட்டிகளிலும் சந்தியா இதுவரை சிறப்பாக விளையாடி உள்ளார் என பாராட்டுகிறார். இது தவிர ஹோட்டலில் நடந்த பிரச்சனையில் சந்தியா மீது எந்த தவறும் இல்லை. குடித்துவிட்டு தவறாக நடந்து கொண்ட நபரை தான் அடித்ததாக விசாரணை கமிஷன் ரிப்போர்ட் அளித்திருப்பதாக கௌரி மேடம் கூறுகிறார். இப்படி பல போட்டிகளில் வெற்றி பெற்ற சந்தியாவுக்கு என்ன வேணும் என ஆபீஸர் கேட்க அதற்கு சந்தியா இரண்டு நாட்கள் லீவு கேட்கிறார். உடனே கௌரி மேடம் சிரித்துக்கொண்டே சம்மதம் தெரிவிக்கிறார்.

மறுபுறம் சிவகாமி ரவி இருவரும் சந்தியா எப்படியாவது இந்த பங்க்ஷனுக்கு வரணும் என பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது பார்த்து அர்ச்சனாவின் அம்மா போன் செய்து உங்க மருமகள் இந்த பங்ஷனுக்கு வர மாட்டாளாமே என கேட்கிறார். சிவகாமி எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்க நீங்க என் மகளை மட்டும் எப்பவும் தனியா தான் பாக்குறீங்க என சண்டை போடுகிறார். சிவகாமி அப்படியெல்லாம் இல்ல எப்படியும் சந்தியா வந்துவிடுவார் நீங்க எதுவும் நினைக்காதீங்க சம்மந்தி என சொல்கிறார். பின் சிவகாமி, ரவி இருவரும் இந்த பிரச்சனையை எப்படி சமாளிக்க போறோம் எப்படியாவது ஏதாச்சும் அதிசயம் நடந்து சந்தியா வரணும் என வேண்டிக் கொள்கின்றனர். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here