ரவுடிகளை அடையாளம் காட்ட ஸ்டேஷனுக்கு சந்தியாவை அழைத்து வரும் சரவணன் – சிவகாமியின் முடிவு??

0

சந்தியா செய்த செயலுக்கு மொத்த குடும்பமும் சேர்ந்து அவளை குற்றம் கூறுகிறது. இதனால் குழப்பமடையும் சந்தியா ரவுடிகளை அடையாளம் காட்ட மாட்டேன் என போலீசாரிடம் மறுத்து விடுகிறார்.

‘ராஜா ராணி 2’

இன்றைய ‘ராஜா ராணி 2’ தொடரில் வீட்டில் நடந்த சம்பவங்களை நினைத்து வருத்தப்படுகிறார் சந்தியா. போலீசிடம் ரவுடிகளை அடையாளம் காட்டுவது தான் சரின்னு தோணுது என சரவணனிடம் சந்தியா கூறுகிறார். அடுத்து என்ன நடக்கப்போகும் என்ற குழப்பத்திலும், பயத்திலும் முழு குடும்பமே காணப்படுகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சரவணனின் அப்பா ஏன்மா நீ இப்படி பண்ண, எதுக்காக அவங்ககிட்ட வம்பிழுத்து வந்த என சந்தியாவை குறை கூறுகிறார். சந்தியா கொடுக்கும் காபியை வீட்டிலுள்ள யாரும் எடுக்காமல் அதற்கு பதிலாக ஆளுக்கொரு வார்த்தையை கூறி சந்தியாவை மறைமுகமாக குற்றப்படுத்துகிறார்கள்.

பின்பு சந்தியா தன் அப்பாவின் போட்டோவை பார்த்து, எங்க தப்பு நடந்தாலும் நீங்க தானே தட்டி கேக்க சொல்லி கொடுத்தீங்க. இப்போ வீட்டில் இவ்வளவு பிரச்சனை நடக்குது. எனக்கு என்ன பண்ணும்னு தெரியல என அழுது கொண்டிருக்கிறார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் – வேட்புமனு தாக்கல் நாளை ஆரம்பம்!!

அப்போது அங்கு வந்த சரவணன் உங்களுக்கு என்ன சரின்னு தோணுது அத செய்யுங்க என நம்பிக்கையுடன் கூறுகிறார். இருவரும் சேர்ந்து இந்த பிரச்சனைக்கு முடிவு கட்ட வேண்டும் என நினைத்து, சந்தியாவின் அப்பா புகைப்படத்தின் முன்னால் சீட்டு குலுக்கி போட்டு பார்க்கிறார்கள்.

இரண்டு சீட்டும் காற்றில் பறந்து விடுகிறது. நடப்பது நடக்கட்டும் என கூறுகிறார் சந்தியா. வீட்டுக்கு போலீஸ் வந்து சாட்சி சொல்ல சந்தியாவை கூப்பிடும் போது, வரவில்லை என மறுத்து விடுகிறார் சந்தியா. அப்போது தான் குடும்பம் முழுவதுக்கும் நிம்மதி வருகிறது.

மதியம் சரவணனின் கடைக்கு சாப்பாடு கொண்டு வரும் சந்தியாவை, ஏமாற்றி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து போகிறார் சரவணன். போலீஸ் ஸ்டேஷன் வந்ததும் அதிர்ச்சியாகிறார் சந்தியா. இத்துடன் இன்றைய ‘ராஜா ராணி 2’ தொடர் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here