விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் தற்போது ஜீ தமிழ் சீரியல் இணைந்துள்ளது. அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
ராஜா ராணி
ராஜா ராணி சீரியலில் அர்ச்சனாவின் அட்டகாசங்களுடன் சேர்ந்து பல விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது. அர்ச்சனாவின் சதி தான் என்று எதுவும் தெரியாமல் சிவகாமி சந்தியாவை வீட்டை விட்டே துரத்துவதில் இருக்கிறார்.
ஆனால் சந்தியா எப்படியும் இந்த வீட்டில் வாழ்ந்தே தீர வேண்டும் என்று பல முயற்சிகளை செய்து வருகிறார். ஆனால் சந்தியாவின் ஒவ்வொரு செய்கையும் சிவகாமிக்கு தவறாகவே படுகிறது.
ஏனெனில் படித்த பெண் என்றால் கண்டிப்பாக மதிக்காமல் தான் நடந்து கொள்வார் என்ற தவறான கருத்து சிவகாமி மனதில் பதிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது நகை திருடியதாக சிவகாமி சந்தியா மீது தான் பழியை தூக்கி போடுகிறார்.
இப்படி கதை விறுவிறுப்பாக நகர்ந்துகொண்டிருக்கும் வேளையில் ஷூட்டிங் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது இதுவரையிலும் இல்லாத விதமாக ஜீ தமிழில் ரெட்டை ரோஜா ஹீரோ இந்த சீரியலில் எதிர்பாராத விதமாக வர சந்தியா, பிரவீன் மற்றும் ரெட்டை ரோஜா சீரியல் ஹீரோ என மூவரும் இணைந்து புகைப்படத்தை எடுத்து வெளியிட்டுள்ளனர். அனைவரும் இதற்கு ஜீ தமிழுடன் மெகா சங்கமமா?? என்றும் கலாய்த்து வருகின்றனர்.