ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது ராஜா ராணி 2 சீரியல். இதில் IPS சந்தியாவிற்கு உயர் அதிகாரியாக வந்திருக்கும் SP அவருக்கு பல கடினமான டாஸ்குகளை கொடுக்கிறார். அந்த SP சந்தியாவிடம் குற்றவாளியை துப்பாக்கி சூடு நடத்தி பிடிக்க வேண்டும் என ஆர்டர் போடுகிறார். ஆனா சந்தியா உயிரோடு பிடிக்கலாம் என்கிறார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதற்கு SP மறுத்துவிட்டு ஷூட்டிங் ஆர்டர்ரை அவரிடம் கொடுக்கிறார். மற்றொரு பக்கம் சரவணன் குடும்பத்தை பழிவாங்க கவிதா, சிவகாமியின் பணத்தை ஆள் வைத்து திருடுகிறார். பின் அவரே காப்பாற்றி கொடுக்கிற மாதிரி ட்ராமா போட்டு தன்னுடைய கையில் காயத்தை ஏற்படுத்துகிறார். அவரின் உள்நோக்கம் தெரியாத சிவகாமி சந்தியாவின் காரில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறார்.
சந்ரமுகியில் ரஜினிகாந்த் கருத்துக்கு விளக்கம் கொடுத்த முக்கிய பிரபலம்!!!
அப்போது காரில் இருந்த ஷூட்டிங் ஆர்டர்ரை கவிதா பார்க்கிறார். பின் போனில் போட்டோ எடுத்து பல சதி திட்டங்களை செய்கிறார். இப்படி விறுவிறுப்பாக நகரும் சீரியலுக்கான அடுத்த எபிசோடில் SP அதிகாரியின் குடும்பம் என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அடுத்தடுத்து என்ன ட்விஸ்ட் நடக்கும் என எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.