விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “ராஜா ராணி 2” சீரியலில் இன்று சந்தியா மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒரு தெரு நாடகத்தில் நடிக்க போவதாக தெரிவிக்கிறார். இதனை அறிந்து பார்வதி உச்சகட்ட கோபம் அடைகிறார்.
“ராஜா ராணி 2” சீரியல்
இன்று “ராஜா ராணி 2” சீரியலில் இன்று சந்தியா மயிலு, சரவணன் மற்றும் சக்கரை அழைத்து முக்கியமான விஷயம் குறித்து பேச வேண்டும் என்று கூறுகிறார். பின், சந்தியா பேசும் போது அத்தை குப்பை தொட்டி விஷயத்தில் மிகவும் கோபம் அடைத்து விட்டதாகவும், அவர் சண்டையின் போது “நீ ஒருத்தி திருந்தினால் போதாது, இந்த தெருவில் அனைவரும் திருந்த வேண்டும்” என்று கூறுகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸில் முல்லை இருந்த ஷூட்டிங் விடியோவை வெளியிட்ட கதிர் – கண்கலங்கிய ரசிகர்கள்!!
இதனை செயல்படுத்தவும், மக்கள் மத்தியில் குப்பையை குப்பை தொட்டில் போட வேண்டும் என்ற கருத்தினை வைத்து ஒரு நாடகம் போட இருப்பதாக கூறுகிறார். அதற்கு சரவணன், சக்கரை ஆகியோர் உதவி செய்ய வேண்டும் என்று கேட்கிறார். சரவணன் தனக்கு நடிப்பு வராது என்று கூறி நழுவ பார்க்கிறார்.
ஆனால், சந்தியா அவரை ஊக்குவிக்கிறார். பின், சரவணனும் சரி என்று கூறி விடுகிறார். அப்போது சக்கரை சரவணன் மற்றும் சந்தியா இருவரது கையையும் கயிறு வைத்து கட்டி விடுகிறார். அப்போது என்று பார்த்து சிவகாமி வந்து விடுகிறார். சரவணனை தேங்காய் உரித்து தர சொல்கிறார். இருவரும் தடுமாறுவதை பார்த்து விட்டு சிவகாமிக்கு எரிச்சல் வருகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
பின், இருவரது கையும் கட்டி இருப்பதனை பார்த்து விட்டு இருவரையும் திட்டி விட்டு சென்று விடுகிறார். பின், இரவில் சந்தியா மற்றும் சரவணன் இருவரும் நாடகத்தில் நடிக்கின்றனர்.
இதனை பார்த்து சிவகாமி மற்றும் பார்வதி மிகுந்த கோபத்தில் உள்ளனர். இத்துடன் இன்றைய எபிசொட் முடிவடைந்து விடுகிறது.