ரசிகர்களின் பெரும் ஆதரவுடன் விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது ராஜா ராணி 2. தன்னுடைய குழந்தை கடத்தப்பட்டதை தாங்க முடியாத அர்ச்சனா தாய்ப்பாசத்தால் தவிக்கிறார். மற்றொருபக்கம் எப்படியாவது குழந்தையை கண்டுபிடித்து கொடுத்துவிடு என சந்தியாவிடம் கெஞ்சுகிறார். சந்தியாவுக்கு அர்ச்சனா செய்வதை பார்த்தால் ஒரு பக்கம் சந்தேகம் வருகிறது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இப்படி பல்வேறு ட்விட்டுகளுடன் ஒளிபரப்பாகும் இந்த சீரியலின் நியூ ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் குழந்தை கிடைக்காத விரக்தியில் வீட்டிற்கு வரும் சந்தியாவிடம், குழந்தை கிடைத்ததா என சந்தியாவிடம் கேட்க, அதற்கு அவர் குழந்தையை கடத்தியவர்கள் மிகப்பெரிய நெட்ஒர்க். அவர்களை அவ்வளவு சீக்கிரம் கண்டு பிடிக்க முடியாது என்கிறார்.
கல்யாணம் முடிஞ்ச கையோட முதலிரவுக்கு அங்க போயிடுவேன்.., ஓப்பனாக பேசிய பப்லு பிரித்விராஜ்!!
இதை கேட்ட அர்ச்சனா, குழந்தை இனி கிடைக்கப்போவதில்லை என்ற முடிவில் தற்கொலைக்கு முயற்சித்து தூக்கு போடுகிறார். அர்ச்சனாவின் செயலால் அதிர்ந்து போன குடும்பம் அவரை காப்பாற்றுகின்றனர். சந்தியாவுக்கு இதையெல்லாம் பார்க்கும் போது அர்ச்சனா எதுக்கு இப்படி பண்ணனும். இதுக்கு என்ன காரணமா இருக்கும் என யோசிக்கிறார். இதை வைத்து பார்க்கும் போது கூடிய விரைவில் அர்ச்சனா செய்த பித்தலாட்டத்தை கண்டுபிடிப்பார் என்று தான் தெரிகிறது.