தமிழ் சின்னத்திரையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது ராஜா ராணி 2 சீரியல். இதில் IPS ஆனா சந்தியாவின் திறமையை சோதிக்கும் வகையில் இவருக்கு அடுத்தடுத்து பல டார்கெட்கள் வந்த வண்ணம் உள்ளது. இதில் தனக்கு கொடுத்த என்கவுண்டரை முடித்த இவர், தனது அத்தையின் செயின் திருட்டில் ஆதி தான் குற்றவாளி என்ற உண்மையை கண்டுபிடித்துள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இப்படி அனல்பறக்கும் காட்சிகளுடன் நகர்ந்து வரும் இந்த சீரியலின் புது ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. தன் தோழி வீட்டில் வளரும் தன்னுடைய பெண் குழந்தையை யாருக்கும் தெரியாமல் அழைத்து செல்ல அர்ச்சனை நினைக்கிறார். மேலும் அவர் தோழி பார்க்காத நேரம் பார்த்து தூக்கி செல்ல அப்போது பார்த்து பைக்கில் வந்த நபர் ஒருவர் கையில் இருந்த குழந்தையை கடத்தி செல்கிறார்.
இதை பார்த்து பொறுத்துக்கொள்ள முடியாத அர்ச்சனா கத்த வீட்டில் உள்ளவர்கள் வெளியே வருகின்றனர். அப்போது அழுதபடியே சந்தியாவிடம் வந்து அர்ச்சனா, அவர் காலில் விழுந்து எப்படியாவது குழந்தையை காப்பாற்று சந்தியா என கதறுகிறார். இதை பார்த்த சந்தியா, அடுத்த வீட்டு குழந்தைக்காக எதற்கு அர்ச்சனா இவ்வளவு கவலைப்பட வேண்டும் என சந்தேகப்படுகிறார். இதை வைத்து பார்க்கும் போது இதற்கு பின் இருக்கும் உண்மையை சந்தியா வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.