ராஜா ராணி சீரியலில் தற்போது விறுவிறுப்பான கதைக்களம் ஒளிபரப்பாகியுள்ள நிலையில் விஜய் டிவி ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
ராஜா ராணி 2
ராஜா ராணி சீரியலில் வழக்கம் போல சண்டைக்கு பின் குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து விட்டனர். அனைவரும் இணைந்து ஒன்றாக சாப்பிட ஆரம்பிக்கின்றனர். இது அர்ச்சனாவுக்கு சுத்தமாக பிடிக்கவே இல்லை. இப்பொழுது வெளியான ப்ரோமோவில் சரவணன் வழக்கம் போல கீழே படுக்கலாமா பெட்டில் படுக்கலாமா என்று யோசித்து கொண்டிருக்க சந்தியா அவரை உட்கார சொல்கிறார்.
இருவரும் பேசிக்கொண்டிருக்க அப்பொழுது சரவணன் கையில் இருக்கும் காயத்தை பார்க்கிறார். சந்தியா பதறி போய் காயத்திற்கு மருந்து போடுகிறார். கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கமாகி சந்தியா சரவணன் அருகில் செல்ல சரவணனும் அரவணைத்து கொள்கிறார். அடுத்த எபிசோடுகளில் இவர்கள் வாழ்க்கையை தொடங்கவுள்ளனர் என்பது இதன் மூலம் தெரிகிறது. இதனால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்