சிவகாமி வைக்கும் முதல் டெஸ்ட்டிலேயே தோற்றுப்போகும் சந்தியா – வைரலாகும் ‘ராஜா ராணி’ ப்ரோமோ!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் தற்போது சிவகாமி சந்தியாவையும், சரவணனையும் பிரிப்பதற்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.

ராஜா ராணி 2

ராஜா ராணி சீரியலில் தற்போது சந்தியா படித்தவர் என்று தெரிந்ததில் இருந்து சிவகாமி சரவணனிடமும், சந்தியாவிடமும் பேசுவதை நிறுத்தி விட்டார். சரவணன் தொடர்ந்து கஷ்டப்படுவதை பார்த்த சந்தியா பல முயற்சிகளுக்கு பின் தற்போது பேச வைத்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதுவும் மூன்று மாதத்தில் நல்ல மருமகள் என்று நிரூபித்தால் தான் இந்த வீட்டில் இருக்க முடியும் என்றும் சொல்லி விட்டார். இந்த சவாலை சந்தியா ஏற்றுக்கொள்கிறார். இன்று வெளியான எபிசோடில் சந்தியாவை அம்மியில் அரைக்க சொல்லி பல வேலைகளை தருகிறார் சிவகாமி.

இதனை ஒளிந்திருந்து பார்க்கும் அர்ச்சனா இன்னும் உனக்கு நெறைய வேண்டும் என்றும் கூறுகிறார். அடுத்ததாக இப்பொழுது வெளியான ப்ரோமோவில் சந்தியாவிடம் ரூ.150 கொடுத்து காய்கறிகளை வாங்க சொல்லி அனுப்புகிறார் சிவகாமி. மார்க்கெட்டுக்கு செல்லும் சந்தியா காய்கறிகளின் விலையை விசாரிக்க தலைசுற்றுவது போல ஆகிறது.

சமையல் எரிவாயு விலை ஏற்றம் எதிரொலி – ட்விட்டரில் ட்ரெண்டாகும் #ModiTax ஹேஷ்டாக்!!

தன்னை சோதிக்க தான் அத்தை இவ்வாறு செய்துள்ளார் என்று புரிந்துகொள்கிறார். விலை மலிவான கடையை தேடி அலைந்து காய்கறிகளை வாங்கி விடுகிறார்.  ரோட்டில் வரும்போது ஒரு சிறுவன் அசால்டாக வர எதிரே வரும் வண்டி அவனை இடிக்க செல்கிறது.

சந்தியா அவனை காப்பற்ற கையில் இருக்கும் காய்கறி பையை அப்படியே விட்டு விடுகிறார். இதனால் காய்கறிகள் அனைத்தும் நசுங்கி விடுகிறது. வீட்டிற்கு வந்து விஷயத்தை சொல்ல அதற்கு சிவகாமி கண்டபடி திட்டுகிறார். காசு என்ன உனக்கு சும்மாவா வருது. நான் வச்ச முதல் டெஸ்ட்டிலேயே நீ தோத்துட்ட என்று கூறுகிறார் செல்கிறார். ஒன்றுமே புரியாமல் நிற்கிறார் சந்தியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here