சீர் வரிசையை கேவலப்படுத்தியும் அண்ணியிடம் விட்டு கொடுக்காமல் பேசும் சந்தியா – அதிர்ந்து போன சிவகாமி!!

0

விஜய் டிவியில் ராஜா ராணி சீரியல் பல எதிர்பாராத திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோ பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.

ராஜா ராணி 2

ராஜா ராணி சீரியலில் சிவகாமி தனது வறட்டு கௌரவத்தால் சந்தியாவை தனது மருமகளாக ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். சந்தியாவை இந்த வீட்டை விட்டு போக வேண்டாம் என்று சொல்லியதால் பலரும் சந்தோஷத்தில் இருக்க ஆனால் சிவகாமி எப்படியும் சரவணனை விட்டு சென்று விடுவாள் என்ற பயத்துடனேயே இருக்கிறார்.

படித்த பெண் வீட்டிற்கு ஒத்து வரமாட்டாள் என்ற பிடிவாதத்துடனேயே இருந்து வருகிறார். இந்நிலையில் தான் தற்போது வீட்டில் பூஜை நடந்து வருகிறது. அதில் சந்தியா வீட்டில் இருந்து சீர்வரிசை வருகிறது. சந்தியா அதனை ஆசையாக பிரித்து அனைவர்க்கும் கொடுக்கிறார்.

அப்பொழுது சிவகாமிக்கு கொடுக்கப்பட்ட சேலையில் 200 என எழுதி இருக்க அதனை அர்ச்சனா கத்தி கூப்பாடு போட்டு வெறும் 200 ரூபாய்க்கு சேலை எடுத்து கொடுத்திருப்பதாக அசிங்கப்படுத்துகிறார். அப்பொழுது சரவணனின் தம்பி அதனை வாங்கி அமெரிக்கா டாலரில் 200 என்றால் நம் நாட்டு பணத்தில் 15000 வரை இருக்கும் என்று சொல்கிறார்.

அப்பொழுதும் சிவகாமி சமாதானம் ஆகாமல் நம்மிடம் இந்த அளவிற்கு சேலை வாங்க காசு இல்லை என்று குத்தி காட்ட தான் பில்லை கூட பிரிக்காமல் அனுப்பி இருக்காங்க என்று சண்டை இடுக்கிறார். அடுத்து சந்தியாவின் அண்ணி அனுப்பி வைத்த பொருட்களை பற்றி கேட்கிறார்.

வீட்டில் நடந்த சண்டைகளை பற்றி சொல்லாமல் அழுகையை துடைத்து கொண்டே நீங்க வாங்கி கொடுத்தது எல்லாருக்குமே பிடிச்சு இருந்துச்சு. என்ற சொல்ல அதனை கேட்டு சிவகாமியை ஆடி போய்விட்டார். வீட்டிற்கு வந்த மருமகள் இப்படி ஒரு குணத்தோட தான் இருக்கணும் என்று கண்கலங்குகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here