ராஜா ராணி சீரியலில் தற்போது சரவணன் சந்தியாவை வீட்டை விட்டு அனுப்ப முடிவெடுத்து பஸ் ஏற்றி விடுகிறார். சரவணன் வீட்டில் எவ்வளவு சொல்லியும் யாரும் எதுவும் கேட்பதாக இல்லை. இந்நிலையில் தற்போது ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.
ராஜா ராணி 2:
ராஜா ராணி சீரியலில் தொடர்ந்து சந்தியாவை வீட்டில் உள்ள அனைவரும் குற்றம் சொல்லிக்கொண்டே இருக்க ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த சரவணன் சந்தியாவை வீட்டை விட்டே அனுப்ப முடிவெடுக்கிறார். சந்தியா எவ்வளவு கெஞ்சியும் சரவணன் கேட்கப்பதாக இல்லை. கடைசியில் பேசி எந்த பிரயோஜனமும் இல்லை என்று சந்தியா வீட்டை விட்டே செல்கிறார். சரவணன் சந்தியாவை வழி அனுப்ப பஸ் ஸ்டாப் வரை செல்கிறார். சந்தியாவை பிரிய முடியாமல் தவிக்கிறார் சரவணன் அதற்கு மேல் சந்தியா சரவணனை பிரிய முடியாமல் தவிக்கிறார்.
பஸ் கிளம்ப ஆரம்பிக்க கடைசியில் சரவணன் ஓடும் பஸ்சில் ஓடி வந்து ஏறுகிறார். சரவணனும் சந்தியாவும் ஒரே பஸ்ஸில் இருவரும் பிரிய முடியாமல் தவித்து கொண்டுள்ளனர். இந்நிலையில் முக்கிய ப்ரோமோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது சந்தியா சரவணன் சென்ற பஸ் திடீரென விபத்திற்குள்ளாகிறது. சரவணன் ஒரு பக்கம் கண் முழித்து சந்தியாவை தேடி அலைகிறார்.
சந்தியா என்று கத்துகிறார். அந்த பக்கம் சந்தியா ஒரு குழந்தையின் உயிரை காப்பாற்ற டாக்டர் என்று கத்த அந்த குரலை கேட்டு சரவணன் ஓடி வருகிறார். சந்தியாவும் சரவணனும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்கின்றனர். இருவரும் ஓடி வந்து கட்டி அணைத்து கொள்ள இந்த ப்ரோமோ அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. இனி இவர்கள் சேருவார்கள் என்றும் ரசிகர்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்