ஆதியின் உண்மை முகம் வெளிவர…, கொலை முயற்சியில் ஜெஸ்ஸி ? – ‘ராஜா ராணி 2’ சீரியல் பயங்கர ட்விஸ்ட் !

0

வித்தியாசமான ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் விதவிதமான சீரியல்கள் கொடுப்பதில் விஜய் டிவியை அடிச்சிக்கவே முடியாது. இதுனாலயே விஜய் டிவி எப்போதும் ரசிகர்கள் மத்தியில் தனி ட்ரெண்டிங்கை கிரியேட் செய்யும். இவ்வாறு ரசிகர்கள் மனதில் நச்சென இடம் பிடித்த டாப் மோஸ்ட் சீரியலில் ஒன்று தான் ராஜா ராணி 2. இதில் சந்தியா – சரவணன் காம்போ சொல்லவே வேண்டாம் அடி தூளாக இருக்கும்.

இதில் கனவுக்காக ஓட நினைத்த சந்தியா இப்போது குடும்பத்துக்காக ஓடுகிறார். ஆமாங்க! சீரியல்ல எப்போ சரவணன் தங்கச்சி பார்வதிக்கு கல்யாணம் பேச்சு எடுத்தாங்களோ அப்போ இருந்தே ஒரே சண்டை , சச்சரவு தான். அந்த சமயம் மாசம் ஆன அர்ச்சனா இப்போ வரைக்கும் திருந்திய பாடில்லை. தொடர்ந்து குடும்பத்துல கலகத்தை உண்டாக்கிட்டு தான் இருக்காங்க.

இது பத்தாதுன்னு ஆதி, ஜெஸ்ஸி கதை தான் இப்போ சீரியலுக்கு ட்ரெண்டிங்கே. கடைசியா வெளியான ப்ரோமோல ஆதிக்கு பொண்ணு பாக்க போறப்போ பொண்ணு தனியா பேசணும்னு கூட்டிட்டு போக அங்க ஜெஸ்ஸி வர, என் வாழ்க்கைக்கு என்ன பதில்னு கேட்க, குழந்தையை கலைச்சிட்டு வேற வழிய பாத்து கெளம்பு என சொல்லி கதவை திறக்கிறார். அப்போன்னு பார்த்து மொத குடும்பமும் வாசல்ல நின்னு ஆதியை மொத்தமா வச்சி செய்றாங்க.

இதுல சிக்குன ஆதி அடுத்து என்ன பண்ண போறாங்கன்னு யோசிச்சிட்டு இருக்கப்போ நெட்டிசன்கள் வேற லெவல் ரூமரை பரப்பியுள்ளார்கள். அது என்னனா இந்த பதிவவுல கொடுத்திருக்க போட்டோவை பார்த்தாலே உங்களுக்கு புரிஞ்சிருக்கும். ஆமா! ஆதி ஏமாத்தினதை தாங்கிக்க முடியாம ஜெஸ்ஸி அவரை கொல்ல முடிவு செய்றது போலவும், அதுனால கையில குத்துவிளக்கு எடுத்து ஓங்கி அடிக்குற மாதிரியும் எடிட் செஞ்சிருக்காங்க. பொய்யா இருந்தாலும் பொருந்த சொல்லியிருந்தா கொஞ்சம் நல்லா இருந்துருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here