ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா குழந்தை பேர் வைக்கும் நிகழ்ச்சிக்கு வர மாட்டாள் என குடும்பத்தில் உள்ள அனைவரும் வருத்தத்தில் உள்ளனர். ஆனா சந்தியா எப்படியோ ட்ரைனிங்கில் சிறப்பாக பர்பார்மென்ஸ் செய்து கௌரி மேடம் மனதில் இடம் பிடிக்கிறார். இதனால் சந்தியாவுக்கு அவர் ஊருக்கு செல்ல பர்மிஷன் கொடுக்கிறார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இதனால் சந்தியா கடைசி நேரத்தில் குழந்தை பேர் வைக்கும் ஃபங்ஷனுக்கு வந்து விடுகிறார். சந்தியா வருவதை பார்த்து குடும்பத்தில் உள்ள அனைவரும் சந்தோஷ படுகின்றனர். ஆனால் இங்கு தான் நம்ம ட்ரைக்டர் மிகப்பெரிய ட்விஸ்ட் ஒன்றை வைத்துள்ளார். அதாவது சந்தியா அர்ச்சனா குழந்தையை பார்த்து விட்டு, பக்கத்துக்கு வீட்டு பெண்ணின் குழந்தையை வாங்கி கொஞ்சுகிறார்.
நாட்டிய பேரொளி பத்மினியின் ஒரே மகனா இவர் ? தீயாய் பரவும் அவரின் குடும்ப புகைப்படம்!!
அப்போது இந்த குழந்தை அப்படியே அர்ச்சனாவை உரிச்சு வச்சுருக்கு என சொல்கிறார். இதை கேட்ட அர்ச்சனா அதிர்ச்சி அடைகிறார். மேலும் இவ உண்மையை கண்டுபிடிச்சா என்ன நடக்க போகுது என மனதிற்குள் புலம்பிக்கொண்டிக்கிறார். இந்த ப்ரோமோவை வைத்து பார்க்கும் போது சந்தியா எப்படியும் உண்மையை கண்டு பிடித்து அர்ச்சாவின் முகத்திரையை கிழிப்பார் என்று தான் தெரிகிறது.