ராஜா ராணி 2 சீரியலில் இப்போது கௌரி மேடம் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கி விட்டார். மேலும் தீவிரவாதிகளின் சதி வேலையால் முக்கியமான இடங்களில் பாம் வைத்துள்ளனர். இது தவிர அரசாங்கத்துக்கு சில கோரிக்கைகளை வைத்து இதை செய்தால் தான் போலீஸ் அதிகாரியை வெளியே விடுவோம் என பிளாக்மெயில் செய்கின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதை கண்டுபிடித்த சந்தியா IPS பயிற்சியாளராக வேஷம் போட்ட ஜோதி மூலம் அனைத்து உண்மைகளையும் தெரிந்துகொண்டு எந்த அசம்பாவிதமும் நடக்காமல் தடுக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த தீவிரவாதிகள் ஜோதியை போலீஸ் கண்டுபிடித்து விட்டார் என்ற செய்தியை அறிந்து அவரை காப்பாற்ற வருகின்றனர்.
பெற்றோர் வீட்டிற்கு சென்ற மனைவி.., கோபத்தில் பிறப்புறுப்பை அறுத்த கணவன்.., பீகாரில் நடந்த சம்பவம்!!
அப்போது அங்கு இருந்த போலீசாரை அடித்து விட்டு ஜோதி தீவிரவாதிகளுடன் தப்பி சென்றது மட்டுமல்லாமல் சரவணனையும் கைது செய்கின்றனர். இந்த விஷயம் நியூஸ் சேனலில் தெரியவர சிவகாமி குடும்பம் முழுவதும் அதிர்ச்சி அடைகின்றனர். இதனால் அடுத்து என்ன விபரீதம் நடக்கப் போகிறது என்று தெரியவில்லை. மேலும் இனி வரும் எபிசோடுகளில் சந்தியா சரவணனை காப்பாற்றுவாரா?? மாட்டாரா?? என பொறுத்திருந்து பார்க்கலாம்.