ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா எப்படியாவது தனது IPS கனவை நிறைவேற்றி சொந்த ஊருக்கு போஸ்டிங் வாங்க வேண்டும் என்று விடா முயற்சி செய்து வருகிறார். இதில் பல்வேறு தடங்கல்கள் வந்தாலும் அதை சமாளித்து வெற்றியை நோக்கி செல்கிறார். இன்னொரு பக்கம் சிவகாமி குடும்பத்திற்கு மாறி மாறி பல பிரச்சனைகள் வந்து கொண்டே தான் இருக்கிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இப்படி இருக்கையில் இந்த சீரியலில் அடுத்து வரும் எபிசோடுகளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதாவது ட்ரைனிங் போது சந்தியாவை தீவிரவாதிகள் யாரும் இல்லாத சமயம் பார்த்து சுட்டு விடுகின்றனர். இதை பார்த்த ஜோதி பதறியடித்துக் கொண்டு, கௌரி மேடம் உள்ளிட்ட எல்லாத்தையும் கூப்பிட்டு சந்தியாவை ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்கிறார். இந்த விஷயம் சிவகாமி, சரவணனுக்கு தெரிய வர அவர்கள் உடனடியாக சந்தியாவை பார்க்க வருகின்றனர்.
எனக்கே தெரியாம இதுக்கு அடிமை ஆயிட்டேன்., ஆலியா மானசாவின் திடீர் பதிவு!!
அப்போது சந்தியா இருக்கும் நிலையை பார்த்து கோபத்தின் உச்சிக்கு சென்ற சிவகாமி இனிமேல் என் மருமகளுக்கு இவ்வளவு ஆபத்தான போலீஸ் வேலையே வேண்டாம் என சொல்லி சொந்த ஊருக்கு அழைத்துச் செல்கிறார். இனி வரும் எபிசோடுகளில் சந்தியா தன் கனவை நிறைவேற்றுவாரா?? மாட்டாரா?? என்று தான் கதைக்களம் நகரப் போகிறது. மேலும் இத்தனை நாள் சந்தியாவுக்கு ஆதரவாக இருந்த சரவணனும் இனி சிவகாமி பேச்சை கேட்கவும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது எனவே அடுத்து என்ன நடக்கும் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.