பார்வதியின் புகைப்படத்தை வைத்து தனியாக வர சொல்லி மிரட்டும் விக்கி – விறுவிறுப்பாகும் ‘ராஜா ராணி 2’!!

0

ராஜா ராணி சீரியலில் தற்போது பார்வதிக்கு பிரச்சனைக்கு மேல் பிரச்சனை வந்து கொண்டிருக்கும் நேரத்தில் தற்போது விக்கி பிளாக் மெயில் செய்யும் விதமாக முக்கிய புகைப்படத்தை காட்டி மிரட்டி வருகிறார்.

ராஜா ராணி

ராஜா ராணி சீரியல் தற்போது பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. பார்வதி இத்தனை நாட்கள் விக்கியை உருகி உருகி காதலிக்க கடைசியில் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதை நினைந்து வேதனையடைகிறார். இப்படி மோசமானவனையா காதலித்தோம் என்று நொந்து போயுள்ளார்.

சந்தியா கடைசி நேரத்தில் வந்து காப்பாற்றாமல் இருந்து இருந்தால் பார்வதியின் நிலைமை பரிதாபமாக ஆகி இருக்கும். தற்போது விக்கி எப்படியும் அவர்கள் குடும்பத்தை பழிவாங்கியே தீருவேன் என்று அலைத்து வருகிறார்.

இன்றைய எபிசோடில் கூட பார்வதியை பார்க்க விக்கி சுவர் ஏறி குதித்து வர அதனை அர்ச்சனா பார்த்து இதுதான் சாக்கு என்று பார்வதியை பழிவாங்க விக்கியை பயன்படுத்த நினைக்கிறார். அதாவது அர்ச்சனா பார்வதியை குடவுனுக்குள் அனுப்பி விக்கியை வரவழைத்து பார்வதிக்கு தெரியாமல் அவரையும் உள்ளே அனுப்பி கதவை பூட்டி அசிங்கப்படுத்த நினைக்கிறார்.

அந்த ப்ரோமோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது விக்கி பார்வதியிடம் அவரின் மோசமான புகைப்படம் ஒன்று இருப்பதாகவும் தான் சொல்லும் இடத்திற்கு தனியாக வர வேண்டும் என்றும் மிரட்டுகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here