ராஜா ராணி சீரியலில் தற்போது பார்வதிக்கு நிச்சயம் நடந்து முடிந்த நிலையில் கல்யாணத்தை படிப்பு முடிந்து செய்து கொள்ளலாம் என்று மாப்பிள்ளை வீட்டார் சொல்லிவிட அந்த பழி சந்தியா மீது விழுந்து விடுகிறது.
ராஜா ராணி 2:
ராஜா ராணி சீரியலில் சரவணனுக்கு சந்தியாவிற்கு இடையே பனி போர் நடந்து வரும் நிலையில் பார்வதி நிச்சயத்திற்கு பிறகு பார்த்து கொள்ளலாம் என்று சரவணன் யோசித்துக்கொண்டுள்ளார். பார்வதி நிச்சயம் முடிந்ததும் மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை 1 வருடம் கழித்து செய்துகொள்ளலாம் என்று சொல்கின்றனர்.
இதனை கேட்டு அனைவரும் அதிர்ச்சியாகின்றனர். பார்வதியின் படிப்பு முடியட்டும் என்று சொல்கின்றனர். இதனை சந்தியா சொல்லி கேட்டதாகவும் சொல்லி விடுகின்றனர். இதனால் சிவகாமி சந்தியா மீது கோவப்படுகிறார். என் பொண்ணு வாழ்க்கையையே நாசமாக்கிட்டியே என்று திட்டுகிறார்.
மேலும் ஆதி, பார்வதிக்கு கிடைத்த வாழ்க்கையை நினைத்து பொறாமை படுவதாகவும் சொல்கிறார். சரவணன் போன்ற படிக்காத பையனை திருமணம் செய்துகொண்டோம். ஆனால் பார்வதிக்கு படிச்ச மாப்பிள்ளை கெடச்சுருச்சுனு பொறாமை என்று சொல்கிறார்.
மேலும் சந்தியா சரவணனுடன் சந்தோசமாக வாழ்ந்து வருவதாக சொல்கிறார். இதனை கேட்டு சரவணன் சத்தம் போடுகிறார். இனி சந்தியாவை யாரும் எதுவும் பேச கூடாது எல்லாத்துக்கும் இப்போவே நான் முடிவு கட்டுறேன் என்று சொல்கிறார். சந்தியாவை அழைத்துக்கொண்டு ரூமிற்கு செல்ல விவாகரத்து பத்திரத்தை காட்டி இனி நீங்க இங்க வாழ வேண்டாம், இது உங்க குடும்பம் கிடையாது என்று சொல்கிறார்.
சந்தியாவை பேச விடாமல் அவரை வெளியே போக சொல்கிறார். இந்த குடும்பத்துக்கு நீங்க என்ன செஞ்சாலும் உங்க மேல பழி தான் வரும் என்று சொல்கிறார். சந்தியா எவ்வளவு கெஞ்சியும் சரவணன் கேட்பதாக இல்லை. இதற்கு மேல் சொல்லி புரியவைக்க முடியாது என்று இது உங்க விருப்பம் என்று கிளம்ப தயாராகிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்