சந்தியாவின் மீது வீண் பழி போடும் சரவணனின் குடும்பம் – தப்பிப்பாரா?? சூடுபிடிக்கும் கதைக்களம்!!

0

ராஜா ராணி சீரியலில் தற்போது சந்தியாவை சிவகாமி ஏற்றுக்கொள்வாரா?? இல்லையா? என்பது தான் விறுவிறுப்பாக போயிக்கொண்டுள்ளது. இந்நிலையில் தற்போது சந்தியாவின் தோழி அனிதா சிவகாமியை கண்டபடி பேசி விடுகிறார். இதனால் குடும்பத்தில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ராஜா ராணி 2

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் சிவகாமி சந்தியாவிற்கு டெஸ்ட் வைக்கிறார். 3 மாதம் வரை கால அவகாசம் கொடுக்கிறார். அதற்குள் நல்ல மருமகள் என்று நிரூபிக்க வேண்டும் என்றும் கூறுகிறார். சிவகாமி கொடுத்த முதல் டெஸ்ட்டிலேயே தோற்றுப்போகிறார் சிவகாமி. ஒரு பையனை காப்பாற்ற போக கடைசியில் காய்கறிகளை கீழே போட்டு விடுகிறார்.

வீட்டிற்கு வரும் சந்தியா நடந்தவற்றை சொல்ல சிவகாமி கண்டபடி திட்டுகிறார். இதனை வெளியில் இருந்து கேட்ட சந்தியா தோழி அனிதா உள்ளே வந்து சிவகாமியை கண்டபடி பேசுகிறார். படிச்ச பொண்ண படிக்காத ஒருத்தருக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டு இப்படி பண்றிங்க என்று சொல்கிறார்.

சந்தியா அனிதாவை திட்டு அனுப்பி வைக்கிறார். சிவகாமி வழக்கம் போல தன்னை அசிங்கப்படுத்தி விட்டாள் என்று கோவித்துக்கொண்டு செல்கிறார். அடுத்ததாக சரவணனுக்கு கோவித்துக்கொண்டு செல்கிறார். சந்தியா என்ன செய்வது என்றே தெரியாமல் தடுமாறி போகிறார். கடைக்கு செல்லும் சரவணன் அனிதா சொன்னதையே யோசித்துக்கொண்டுள்ளார்.

சந்தியா கடைக்கு வர மன்னிப்பு கேட்கிறார். தவறு எங்கள் மீது தான். உங்கள் பக்கம் இருக்கும் நியாயம் தெரியாமல் போயிடுச்சு என்று சொல்கிறார். இதனால் பதறும் சந்தியா உங்களை மாதிரி ஒரு கணவர் கிடைச்சதுக்கு நான் கொடுத்து வச்சு இருக்கணும் என்று கூறுகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

எதையும் நினைக்காமல் வேலையை பாருங்க என்று சொல்கிறார். அடுத்ததாக சந்தியா கோலம் போட கற்றுக்கொள்கிறார். அப்பொழுது சந்தியா அண்ணன் கால் செய்கிறார். சந்தியா பேச மறுக்கிறார். எப்படியோ சந்தியாவை பேசவைக்க மணியின் கெஞ்சலில் சந்தியாவும் மன்னித்து விடுகிறார். அடுத்ததாக சரவணனின் தம்பி ரூமுக்குள் படுத்துக்கொண்டு லேப்டாப் பார்த்துக்கொண்டுள்ளார்.

சட்ட பேரவையில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் இடம் – உயர்நீதிமன்றம் கருத்து!!

இதனை கவனித்த அர்ச்சனாவின் கணவர் வீட்டில் உள்ள அனைவரையும் அழைக்கிறார். சரவணனின் தம்பியை மிரட்டுகிறார். எப்படி இந்த லேப்டாப் கெடச்சது என்று கேட்கிறார். கடைசியில் சந்தியா அண்ணி தான் வாங்கி கொடுத்தாங்க என்று மாட்டி விடுகிறார். இதோடு எபிசோடும் முடிவடைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here