போலீஸ் ஆகுற தைரியமும் இருக்கு.., அதை உங்ககிட்ட சொல்ல தைரியம் இல்லை.. சரவணனிடம் லட்சியத்தை சொல்ல முடியாமல் தவிக்கும் சந்தியா!!

0

ராஜா ராணி சீரியலில் தற்போது சந்தியா சரவணன் பைக்கை வாங்க ஷோ ரூம் செல்கின்றனர். மேலும் பார்வதிக்கு பாஸ்கர் சர்ப்ரைஸ் ஒன்றை தருகிறார்.

ராஜா ராணி 2

ராஜா ராணி சீரியலில் சந்தியாவிற்கு அடுத்தடுத்து பிரச்சனைகள் வந்து கொண்டே உள்ளது. ஒரு பக்கம் சிவகாமி சமாதானம் ஆனாலும் அடுத்து எதாவது பிரச்னையை இழுத்து கொண்டே உள்ளார். இந்நிலையில் சரவணனை சந்தியா ஷோரூமுக்கு அழைத்து செல்கிறார்.

மேலும் சந்தியா சுடிதாரை மாற்றிக்கொண்டு வர எதற்கு என்று புரியாமல் இருக்கிறார் சரவணன். சந்தியா பைக் இருக்கும் இடத்திற்கு போக தனக்கு வண்டி ஓட்ட தெரியாது என்று சொல்கிறார் சரவணன். அதெல்லாம் நான் பார்த்துக்கறேன் என்று சொல்லி சந்தியா சரவணனை பின்னால் அமர்த்தி வண்டி ஓட்டுகிறார்.

இது சரவணனுக்கு பெரிய ஷாக்காக உள்ளது. உங்களுக்கு எப்படி வண்டி ஓட்ட தெரியும் என்று சொல்கிறார். அப்பா கத்து கொடுத்ததாக சொல்கிறார். மேலும் தன் அப்பா எல்லாமே கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொன்னதாக சொல்கிறார்.

மேலும் சந்தியா மனதில் போலீஸ் வேலைக்கு தேவையான அனைத்து விஷயத்தையும் தான் கற்று கொண்டதாகவும், போலீஸ்கான அனைத்து தைரியமும் தனக்கு இருக்கு. ஆனால் சரவணனிடம் சொல்ல தான் தனக்கு தைரியம் இல்லை என்று மனதில் நினைத்து கொள்கிறார்.

மற்றொரு பக்கம் பார்வதி பாஸ்கருக்காக காத்து கொண்டுள்ளார். பாஸ்கர் அங்கு வர உங்களுக்கு பெரிய சர்ப்ரைஸ் இருக்கு என்று சொல்கிறார். இது விக்கி வேலையாக இருக்குமோ என்று ஒரு பக்கம் பார்வதிக்கு டவுட்டாக உள்ளது. இந்நிலையில் தான் சந்தியா பைக்கில் போய்க்கொண்டிருக்கும் போது அந்த பக்கம் சிவகாமி நின்று கொண்டிருக்க அப்படியே பைக்கை நிறுத்தி திரும்பி விடுகிறார் சந்தியா. இதோடு எபிசோடு முடிவடைகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here