ராஜா ராணி சீரியலில் சிவகாமியின் மாமியார் சிவகாமியையும் சந்தியாவையும் மாற்றி மாற்றி கேவலப்படுத்திக்கொண்டுள்ளார். மேலும் சந்தியாவும், சரவணனும் ஒன்றாக இருப்பதை பார்த்து விடுகிறார். இதனால் பெரிய பிரச்சனைகள் ஏற்படுகிறது.
ராஜா ராணி 2
சந்தியா தனது துணியை எடுக்க சரவணனின் ரூமிற்கு செல்கிறார். அப்பொழுது ரவியும் அவரது அம்மாவும் வந்து விட சரவணன் சந்தியா ஒளிந்துகொண்டனர். இதனை பார்க்காமல் ரவி கதவை மூடி விட்டு செல்கின்றனர். பல தடவை முயற்சித்தும் கதவு திறக்கவில்லை.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதனால் மேலே ஏறி சென்று விடலாம் என்று முயற்சிக்க மறுபடியும் இருவரும் கீழே விழுகின்றனர். சிவகாமியும் அவரது மாமியாரும் இருவரையும் தேடி வர சத்தம் கேட்டு கதவை திறக்கின்றனர். அப்பொழுது இருவரும் ஒன்றாக இருப்பதை பார்த்து விடுகின்றனர்.
சபைக்கு முன்னால் சிவகாமியின் மாமியார் சந்தியாவை அசிங்கபடுத்துகிறார். இதனால் கோவமடையும் சிவகாமி இந்த போட்டியில் இருந்து விலகி கொண்டு உங்க அண்ணனை அழைச்சுக்கிட்டு அமெரிக்காவுக்கு போயிடு என்று சொல்கிறார். மேலும் சந்தியாவை அங்கிருப்பவர்கள் அனைவரும் கிண்டல் செய்கின்றனர்.
அடுத்ததாக அர்ச்சனா தனது தங்கைக்கு மாப்பிள்ளை பார்க்க சிவகாமி வீட்டிற்கு வர சொல்லலாம் என்று பல திட்டங்களை போடுகின்றனர். அடுத்ததாக சரவணன் சந்தியாவின் நிலைமையை நினைத்து வருத்தப்படுகிறார்.
டிபன் பாக்சில் லெட்டர் எழுதி கொடுக்கிறார். உங்க பொறுமைக்கு கண்டிப்பா நீங்க இந்த சவாலில் ஜெயிப்பீங்க என்றும் சொல்கிறார். இதனை படித்ததும் சந்தியா சந்தோஷமடைகிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.