ராஜா ராணி 2 – தன் தாயிடம் உண்மையை போட்டு உடைக்கும் சரவணன்! சந்தியாவை ஏற்றுக் கொள்வாரா சிவகாமி!!

0

ராஜா ராணி சீரியலில் தற்போது சிவகாமி மனமிறங்கி சரவணனுக்காக வந்த ஆர்டரை செய்து கொடுக்கிறார். மேலும் இன்றைய எபிசோடில் சரவணன் தனது அம்மாவிடம் நடந்தவற்றை எடுத்து சொல்லி புரிய வைக்கிறார்.

ராஜா ராணி 2

அம்மாவின் கோவத்திற்கு ஆளான சரவணன் எந்த வேலையிலும் ஈடுபாடு இல்லாமல் ஸ்வீட் ஸ்டாலை சரியாக கவனிக்க முடியாமலும் தவிக்கிறார். இதனை பார்த்த சந்தியாவிற்கு இந்த பிரச்சனை எல்லாம் தன்னால் தான் என்று நினைத்து எப்படியாவது இருவரையும் பேச வைக்க வேண்டும் என்று துடிக்கிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தனது மாமனாருடன் சேர்ந்து லட்டு செய்யும் சந்தியா எல்லாவற்றையும் தவறாக செய்ய இதை பார்க்கும் சிவகாமி அவர்களை எழுப்பி விட்டு தன் மகனுக்காக அவரே லட்டு செய்கிறார். யாரிடம் கொடுத்து விடுவது என்று யோசிக்கும் சிவகாமி தனது சின்ன மருமகளுக்கு கால் செய்து வர சொல்கிறார்.

ஆனால் அவர்  அதனை கண்டு கொள்வதாக இல்லை. நேரம் ஆக ஆக யாரும் வராததை பார்த்து சிவகாமியே கிளம்பி செல்கிறார். ஏற்கனவே ஆர்டர் கொடுத்தவர் சரவணனை கண்டபடி திட்டிக் கொண்டுள்ளார். அப்பொழுது அங்கு வரும் சிவகாமி அந்த லட்டுவை அவரிடம் கொடுக்க சாப்பிட்டு விட்டு மிகவும் அருமையாக இருப்பதாக சொல்கிறார்.

மேலும் சரவணனிடம் மன்னிப்பும் கேட்கிறார். சரவணன் சிவகாமியின் காலில் விழுந்து தன்னை மன்னித்து விடும்படி கெஞ்சுகிறார். அப்பொழுது அங்கு ஓடி வருகிறார் அர்ச்சனா. என்ன அத்தை கூப்பிட்டீங்க? என்று சொல்ல கோவமடையும் சிவகாமி நான் எப்போ கூப்பிட்டேன், நீ எப்போ வர என்று கத்துகிறார்.

மேலும் சரவணனையும், சந்தியாவையும் தனியாக பேச வேண்டும் என்றும் அழைக்கிறார். சரவணனிடம் ஏன் இப்படி ஆகிட்ட எப்படி வேலை பாக்குறவன் நீ. திடிர்னு இப்படி ஆனதுக்கு என்ன காரணம் என்று கேட்கிறார். நீங்க தான் அம்மா காரணம். குடும்பம் ஒற்றுமையா இருக்கணும்னு சொல்லி வளர்த்தீங்க.

விவசாயிகள் நகைக்கடன், மகளிர் சுயஉதவிக்குழு கடன்கள் தள்ளுபடி – முதல்வர் அதிரடி!!

இப்படி நீங்களே பண்ண எனக்கு எப்படி இருக்கும் என்று சொல்ல, அதற்கு சிவகாமி உன் பொண்டாட்டி படிச்ச விஷயத்தை மறச்சு இருக்கா அது தப்பு இல்லையா?? என்று கேட்கிறார். அது சந்தர்ப்ப சூழ்நிலையால் மறைச்சுட்டாங்க. அவங்களுக்கே இது ஷாக் தான். நான் MBA படிச்சிருக்கதா, அவங்க அண்ணா சந்தியா கிட்ட சொல்லி இருக்காங்க.

இந்த எல்லா தப்புக்கும் காரணம் அவங்க அண்ணா தான் என்று சொல்கிறார். உண்மை தெரிஞ்சதும் ஏன் வந்து சொல்லல. இப்போ இவ்வளவு பிரச்சனை வந்து இருக்காதுல என்று சொல்கிறார். சந்தியாவின் நிலைமையை ஓரளவிற்கு புரியவைக்கிறார் சரவணன். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here