ராஜா ராணி சீரியலில் தற்போது சிவகாமி சரவணனை ஏற்றுகொண்டதை அடுத்து சரவணனும் சந்தியாவும் நெருக்கம் காட்ட ஆரம்பிக்க பார்வதி கெட்ட கனவால் பயந்து சரவணன் ரூம் கதவை தட்டுகிறார்.
ராஜா ராணி 2
சந்தியா சரவணன் பெரிய ஆபத்தில் இருந்து மீண்டு வந்தும் சிவகாமி அடங்காமல் சந்தியாவை குறை கூறிக்கொண்டே உள்ளார். என் மகனை பற்றி என்கிட்டையே சொல்ற அந்த அளவுக்கு ஆகிடுச்சா என்று கத்த ஆரம்பிக்கிறார். கடைசியில் சிவகாமி சமாதானமும் ஆகி விடுகிறார். அனைவர்க்கும் ஊட்டியும் விடுகிறார். இதனால் அர்ச்சனாவுக்கு கோவமும் வருகிறது.
இந்நிலையில் தான் சாப்பிட்டு முடித்து சரவணன் ரூமிற்கு வருகிறார். அப்பொழுது சந்தியா பாட்டு பாடி கொண்டிருக்க அதனை ரசித்த படியே நிற்கிறார். தனக்காக ஒரு பட்டு பாடும் படி சொல்ல சந்தியா மறுக்கிறார். அதன் பின் தூக்கம் வருவதாக பாயை எடுக்க செல்கிறார் சரவணன். இதனால் பதறும் சந்தியா அருகில் உட்கார வைக்கிறார்.
வீட்டில் நடந்த சண்டையை பற்றி பேசி கொண்டுள்ளனர். அப்பொழுது சந்தியா அத்தைக்கு உங்க மேல தனி பாசம் என்று சொல்கிறார். அதனால் தான் இத்தனை சண்டை வருகிறது என்று சொல்கிறார். அதன் பின் தான் சந்தியா சரவணன் கையில் இருக்கும் காயத்தை பார்க்கிறார்.
அதற்கு மருந்து போட்டு விட கொஞ்சம் கொஞ்சமாக அருகில் நெருங்குகிறார். அடுத்ததாக பார்வதியை காட்ட அவர் அசந்து தூங்கி கொண்டுள்ளார். அப்பொழுது விக்கி உள்ளே வந்து கதவை பூட்ட அருகில் வந்து என்ன ஏமாத்திட்டு இப்போ நிம்மதியா தூங்குறியா என்று கத்தியை எடுத்து குத்த செல்கிறார்.
அப்பொழுது கண் முழிக்கும் பார்வதிக்கு அது கனவு என்று புரிகிறது. சரவணன் சந்தியா கிட்டத்தட்ட ரொமான்ஸில் களமிறங்கி விட்டனர். அப்பொழுது பதறி அடித்து கொண்டு பார்வதி கதவை தட்டி அழுகிறார். தனக்கு பயமாக இருப்பதாக அழுகிறார். இதோடு எபிசோடு முடிவடைகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்