‘உனக்கெல்லாம் வேற வேலையே இல்லையா?? தின்னுட்டு தூங்க தான் லாயக்கு’ – சிவகாமியை கண்டபடி கிழிக்கும் மாமியார்!!

0

ராஜா ராணி சீரியலில் சந்தியா சிவகாமியுடன் ஊருக்கு செல்ல ஒத்துக்கொள்கிறார். இதனால் நடக்க இருக்கும் பிரச்சனைகள் என்ன என்பது தான் இன்றைய எபிசோடின் ட்விஸ்ட்.

ராஜா ராணி

சந்தியா ஊருக்குள் கால் எடுத்து வைத்ததும், அங்கு நடக்கும் அனைத்துமே தவறாக படுகிறது. மேலும் ஆரம்பத்தில் இருந்த கிராமம் இதுவரையிலும் மாறவில்லை என்றும் கூறுகிறார் ரவி. சந்தியாவை யாருக்கும் அடையாளம் தெரியாததால் யார் என்று கேட்கின்றனர். அடுத்து சிவகாமியின் மாமியார் டை அடித்துக்கொண்டிருக்க சந்தியா ஒளிந்துகொண்டு பார்க்கிறார்.

அப்பொழுது அந்த கிழவி பார்த்து விட யார் என்று கேட்கிறார். நான் டவுனில் இருந்து வந்ததாக சொல்ல பேங்கில் இருந்து வந்ததாக நினைத்து கொள்கிறார். மேலும் நன்கு உபசரிக்கிறார். கடைசியில் விவசாயக்கடன் என்று சொல்ல அப்பொழுது சிவகாமி வந்து விடுகிறார்.

இது சரவணனின் பொண்டாட்டி என்று சொல்கிறார். மரியாதைனா என்னனு கூடவா உன் மருமகளுக்கு சொல்லி தர மாட்ட. அவளுக்கு இங்க இருக்கவங்க யாருனு தெரியாது. நீ தானா கைபுடுச்சு கூட்டிட்டு வந்து அறிமுகப்படுத்தனும். திங்க மட்டும் தான் லாயக்கு என்று கண்டபடி பேசுகிறார்.

அடுத்து சிவகாமி சந்தியாவை மாமியார் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க சொல்கிறார். சந்தியாவும் ஆசிர்வாதம் வாங்க அதற்கும் குறை சொல்கிறார். அடுத்து காலை அமுக்கி விட சொல்ல சந்தியா அழுத்தமாக பிடித்து விடுகிறார். அடுத்து அர்ச்சனா சேலை கொடுத்து விட்டதாக சொல்கிறார். அதற்கும் சிவகாமியை திட்டுகிறார் அவரது மாமியார்.

மீண்டும் ‘தேசிய விருது’ இயக்குனருடன் இணையும் தனுஷ் – அவரே வெளியிட்ட அதிகாரப்பூர்வ பதிவு!!

சந்தியாவிற்கு இது மிகவும் புதிதாக உள்ளது. அடுத்து சரவணனின் சித்தி சந்தியாவிற்கு ரூமை காட்டுகின்றார். தன் பொண்ணுக்கு காலேஜ் படிக்கும்போதே கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என்று ஆடம் பிடித்து இவ்வாறு செய்கின்றனர் என்று சொல்கிறார். பாட்டிக்கு ஐஸ் வைக்கிற மாதிரி பேசினால் கண்டிப்பாக சமாளிக்கலாம் என்றும் கூறுகிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here