ராஜா ராணி 2 – அர்ச்சனாவிற்கு சரியான பதிலடி கொடுத்த சந்தியா! புரியாமல் நடந்து கொள்ளும் சரவணன்!!

0

ராஜா ராணி சீரியலில் தற்போது சந்தியாவை தொடர்ந்து வம்பிழுத்து கொண்டிருக்கும் அர்ச்சனாவிற்கு பதிலடி கொடுக்கிறார்.

ராஜா ராணி

ராஜா ராணி சீரியலில் தற்போது பரபரப்பான பல காட்சிகள் நடந்து வருகிறது. அதாவது சந்தியா தனது தோழியுடன் பேசி கொண்டிருந்ததை தவறாக நினைத்து சந்தியா மீது கோபமடைந்து வருகிறார் சரவணன். சந்தியாவிற்கு சரவணன் எதற்காக கோவமாக இருக்கிறார் என்றே தெரியவில்லை. இப்படி இருக்க அர்ச்சனா வேறு அடிக்கடி வந்து சந்தியாவை சீண்டி பார்க்கிறார்.

இன்றைய எபிசோடில் சந்தியா சரவணனிடம் பேசலாம் என்று செல்கிறார். ஆனால் சரவணன் சந்தியாவின் முகத்தை கூட பார்க்கவில்லை. அப்பொழுது சரவணனின் நண்பர் ஒருவர் கல்யாணத்திற்கு பத்திரிகை கொடுக்க வருகிறார். அப்பொழுது பத்திரிகையை பார்த்து விட்டு பொண்ணு படிக்கலையா?? என்று கேட்கிறார்.

அதற்கு படித்த பெண் என்றால் வேலைக்கு அனுப்ப வேண்டும். இதனால் பல பிரச்சனைகள் ஏற்படும். எதற்கு வம்பு என்று தான் படிக்காத பெண்ணை திருமணம் செய்ய ஒத்து கொண்டேன் என்று கூறுகிறார். இதனை சந்தியா கேட்டு ஷாக்காகிறார். மேலும் சரவணனும் இது சரியான முடிவு தான் என்று பாராட்டுகிறார்.

பிக் பாஸ் ஆரவ் நியாபகம் இருக்கா?? இப்போ யாரோட ஜாய்ண்ட் ஆயிருக்காருனு பாருங்க!!

சந்தியாவிற்கு இதில் ஏதோ பெரிய விஷயம் இருப்பதாக தெரிகிறது. சந்தியா வீட்டிற்கு செல்ல அங்கு அர்ச்சனா அத்தைக்கு உன்ன புடிக்காததுக்கு காரணம் தெரியுமா?? என்று கேட்கிறார். சந்தியா ஏன் என்று கேட்க அதற்கு அத்தைக்கு உன்ன சுத்தமாகவே பிடிக்கல என்று சொல்லி சிரிக்கிறார்.

மேலும் எப்படி அத்தை கிட்ட இவ்வளவு பொறுத்து போறியோ என்று சொல்கிறார். அதற்கு சந்தியா சரியான பதிலடி தருகிறார். அதாவது நீ வீட்டு செலவுக்கு காசு கேட்டதற்காக டிரஸ் குடவுனை எரிச்சு நாடகமாடிய போது அத்தை அதனை கண்டுபிடித்து வீட்டை விட்டே வெளியேயேற்றினார்.

அப்பொழுது நீ எப்படி பொறுத்துகிட்டியோ அதே மாதிரி தான் நானும் பொறுத்துகிட்டேன் என்று சொல்லுகிறார். அர்ச்சனா இந்த பதிலை சுத்தமாக எதிர்பார்க்கவே இல்லை. அடுத்ததாக சந்தியாவை இனி சாப்பாட்டை கடைக்கு எடுத்து வர வேண்டாம் என்று சொல்லி விட்டு கிளம்புகிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here