ராஜா ராணி சீரியலில் தற்போது சரவணனும் சந்தியாவும் மனஸ்தாபத்தில் இருக்க சரவணன் மீண்டும் ஒரு முக்கிய முடிவை எடுக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வைரலாகி வருகிறது.
ராஜா ராணி ப்ரோமோ
ராஜா ராணி சீரியலில் தற்போது சரவணனும் சந்தியாவும் கோவிலுக்கு சென்று வருகின்றனர். சந்தியாவிற்கு உடல்நிலை சரியில்லாததால் கஷாயம் எல்லாம் போட்டு தருகிறார்.
இப்படி இன்றைய எபிசோடு பல ரொமான்ஸ் காட்சிகளுடன் நடந்து கொண்டுள்ளது. இந்நிலையில் தற்போது ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது சரவணன் ரவியுடன் அமர்ந்து பேசிக்கொண்டுள்ளார்.
அப்பொழுது ரவி ஏன் சந்தியாவை விட்டு விலகுற என்று கேட்டதற்கு சந்தியாவிற்கு நான் பொருத்தமானவன் கிடையாது, அதனால் அவரிடம் அன்பாக பழகுவது தவறு அதனால் தான் விலகி போகிறேன் என்று சொல்கிறார்.
மேலும் இதனை சந்தியாவிடம் சொல்ல கூடாது என்றும் சத்தியம் வாங்குகிறார் சரவணன். மற்றொரு பக்கம் சந்தியா எப்படியும் சரவணனை சமாளித்து விடலாம். பிரச்சனை சீக்கிரம் முடிந்து விடும். அதன் பிறகு சந்தோசமாக வாழலாம் என்று யோசிக்கிறார். அதன் பின் சரவணன் பார்வதி நிச்சயம் முடிந்த பிறகு சந்தியாவை அனுப்பி விட வேண்டும் என்றும் கூறுகிறார். இதோடு ப்ரோமோவும் முடிவடைகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்